சாய்ந்தமருதில் விபத்து, கல்முனை இளைஞர் ஒருவர் உயிரிழப்பு


#Reports/RikaasAhamed.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற இரு
விபத்துக்கள் - ஒருவர் பலி...!
இதில் கல்முனையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்..
மற்றொருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக முச்சக்கர வண்டி மற்றும் பஸ் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.
மேலும்,சாய்ந்தமருதில் ரெட்சிலிக்கு அருகாமையில் இரு மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் நால்வர் ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளைர்.
இதே சமயம் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஆட்டோ ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்க்ப் பட்டுள்ளைர்.
மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.