15 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி




 


(சுகிர்தகுமார்) 


 அக்கரைப்பற்று 7/4 பிரிவில் 15 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கிய  நிலையில் மீட்க்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (09)மாலை இடம்பெற்ற நிலையில் மாணவன் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூக்கில் தொங்கிய மாணவன் ஆண்டு 10 இல் கல்வி கற்றுவந்த நிலையில் சில நாட்களாக பாடசாலைக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளதுடன் வர்ணப்பூச்சு வேலைக்கும் சென்று வந்துள்ளான்.
இவ்வாறு இருக்கையில் நேற்று சில நண்பர்களுடன் வெளியே சென்று வந்துள்ளதுடன் தந்தை வெளியே சென்று வந்ததையும் தேவையற்ற நண்பர்களின் நட்பை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதன் பின்பாக அருகில் இருந்த அப்பம்மாவின் வீட்டில் தூக்கிட்டுள்ளதுடன் இதனை அவதானித்த உறவினர்கள் உடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது இவ்வாறிருக்க மாணவர்கள் மீதும் சிறிய வயதுடைய இளைஞர்கள் மீதும் இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரிகள் தமது வியாபாரத்தை மிகச்சூட்சுமமான முறையில் முன்னெடுத்துச் செல்வது அதிகரித்து வருகின்றமையும் அறிய கிடைக்கின்றது.
ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது உணர்த்தப்படுகின்றது.