ஏழு ஆண்டுகளின் பின் நடந்த பெண்கள் பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா!





 ( வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையின்   
97ஆவது ஆண்டு நிறைவினை  சிறப்பிக்கும் வகையில்  இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக  கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

ஏழு ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் யாவும்  பாடசாலையின் அதிபர்  ச.ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது .

நிகழ்வில் பிரதம அதிதியான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் , 
கௌரவ அதிதியான கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம்.ஜாபீர் 
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.