Showing posts with label Article. Show all posts

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் இன்று இந்தோனேசியாவில் எலென்மஸ்க்கைச் சந்தித்து இலங்கையில் Starlink ஐ நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார் மற்றும் உலகளாவிய Starlink வலையமைப்புடன் SLஐ இணைக்க விண்ணப்ப செயல்முறையை துரிதமாக கண்காணிப்பதில் உறுதியளித்தார் - PMD #LKA #SriLanka #Starlink

 


கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவி விலகினார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) மே 15-ஆம் தேதி லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைத்தார்.


இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.


1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People's Action Party - PAP) சேர்ந்தவர்கள்.


சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew). அவர், தற்போது பதவி விலகும் லீ சியென் லூங்-கின் தந்தை, நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் பரவலாகக் கருதப்பட்டவர். 25 ஆண்டுகள் அந்நாட்டை வழிநடத்தியவர்.


லீ சியென் லூங் ஒரு மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்றாலும், இந்த மாற்றம், சிங்கப்பூரின் அரசியல் அவரது குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறுகிறது என்பதைக் குறிக்கிறது, என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட 

படக்குறிப்பு,சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ் தர்மனிடம் தனது ராஜினாமாவை கையளிக்கும் லீ சியென் லூங்

கடந்த வார இறுதியில் பிரதமர் என்ற முறையில் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த தனது இறுதிப் பேட்டியில், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.


"மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.


அவர் தனது தந்தை, மற்றும் அவருக்கு முன் இருந்த மற்றொரு பிரதமரான கோ சோக் டோங்க் (Goh Chok Tong) ஆகியோரது செயல்முறையிலிருந்து வேறுபட்ட பாணியில் 'காரியங்களை தன் வழியில் செய்ய' முயற்சித்ததாக அவர் மேலும் கூறினார்.


லீ சியென் லூங் 1984-இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க்-இன் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 2004-இல் அவர் அரசுக்குத் தலைமையேற்றார்.


சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட 

படக்குறிப்பு,புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் லீ சியென் லூங்

அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. அரசியல் விமர்சகர்கள் லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதாகக் கூறினர். அதை லீ குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். தனிப்பட்ட உரையாடல்களில், சில சிங்கப்பூர் மக்கள் 'fami-Lee politics' என்று இதைக் கேலி செய்தனர்.


ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ சியென் லூங் தனது முத்திரையை பதித்தார்.


அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது. கடந்த 20 ஆண்டுகளில் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது. பல பொருளாதார மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போதெல்லாம் நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீ சியென் லூங்-இன் அரசாங்கத்திற்கு உண்டு.



சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லீ சியென் லூங்-இன் ஆட்சியில் சிங்கப்பூர் ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது

லீ சியென் லூங்-இன் அரசியல் பாதை

சர்வதேசப் புவிசார் அரசியலில், இப்பிராந்தியத்தில் இழுபறியிலிருந்த, அமெரிக்கா-சீனா போட்டியை லீ சியென் லூங் கவனமாக சமநிலைப்படுத்தினார். LGBTQ குழுக்கள் பல ஆண்டுகளாகப் பரப்புரை செய்ததைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை எதிர்ப்பு சட்டத்தை (anti-gay sex law) ரத்து செய்தது. இருப்பினும் சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


அவரது அரசியல் பரம்பரை மற்றும் மென்மையான, அறிவார்ந்த தோற்றம் ஆகியவற்றால், லீ சியென் லூங் பொதுவாக சிங்கப்பூர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகள் குறித்த கணக்கெடுப்பில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். அவரது தொகுதி, தேர்தல்களில் அதிக வாக்குச் சதவீதத்தைப் பெறுகிறது.


ஆனால் அவர் விமர்சனங்களிலிருந்தோ சர்ச்சைகளிலிருந்தோ தப்பவில்லை.


2000-களின் பிற்பகுதியில், தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிக்க அவரது அரசாங்கம் முடிவு செய்தது. இது ஆழ்ந்த அதிருப்தியைத் தூண்டியது. சிங்கப்பூர் செல்வச் செழிப்பாக மாறியதும், சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருமான இடைவெளி அதிகரித்தது. லீ சியென் லூங்-கின் கீழ், மக்கள் செயல் கட்சி 2011 மற்றும் 2020 இல் அதன் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றது.


ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் சிங்கப்பூர் ஆளுகை நிபுணரான டொனால்ட் லோ, "லீ சியென் லூங் பதித்த முக்கிய முத்திரை, அவர் பொருளாதாரத்தை மேம்படுத்திய விதம் தான்," என்று குறிப்பிட்டார்.


"ஆனால் அவரது பதவிக்காலத்தின் முதல் பாதியில், அந்த மேம்பாட்டுக்காக அதிகரித்து வந்த ஏற்றத்தாழ்வு, அதிக எண்ணிக்கையில் குடியேறிய வெளிநாட்டினர், வேலைவாய்ப்புகளுக்கான போட்டி, நெரிசல், மற்றும் குடியுரிமை அடையாள இழப்பு ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது," என்கிறார் அவர்.


அரசியல் விமர்சகர் சுதிர் வடகேத், லீ சியென் லூங்-இன் அரசாங்கம் "சிங்கப்பூரை ஒரு உலகளாவிய நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அதீத குடியேற்றத்தைச் சமாளிக்கத் தயாராக இருக்கவில்லை," என்றார்.


சிங்கப்பூர் மக்களிடம் இருந்து இதற்கான ஏற்பினைப் பெறாததால் இது இன்றுவரை இருக்கும் 'மிக மோசமான இனவெறி மற்றும் வெறுப்புக்கு' வித்திட்டது, என்று வடகேத் கூறினார். அவர் 'ஜோம்' என்ற சுதந்திர செய்தி இதழை நடத்துகிறார். சிங்கப்பூர் மக்கள் 'இனவெறி' தீவிரமடைந்து வரும் ஒரு பிரச்னையாக உணர்கிறார்கள் என்றும், கோவிட் பெருந்த்தொறின் போது இது தீவிரமடைந்தது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.


நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்னையான பொது வீட்டுக் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்னையை லீயின் அரசாங்கம் போதுமான அளவில் தீர்க்கவில்லை என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இந்தக் கட்டடங்களில் தான் வசிக்கின்றனர். பலரும் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து அரசாங்கத்திடமிருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு அவர்களுக்கு வயதாகும்போது குறையும்.


இந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டு, அரசாங்கம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மூலமும் கடுமையான விதிகள் மூலமும் அவற்றைத் தீர்க்க முயற்சித்துள்ளது.

சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

பொது வெளியில் நடந்த குடும்பச்சண்டை

தனிப்பட்ட முறையில், லீ சியென் லூங்-இன் தந்தை லீ குவான் யூ இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அவருக்கு சொந்தமான வீட்டைச் சுற்றி நடந்த ஒரு குடும்பச் சண்டை 2016-இல் பொதுவெளிக்கு வந்தது. பிரதமர் லீ சியென் லூங் தனது உடன்பிறப்புகளுடன் பல ஆண்டுகளாக ஒரு பொதுச்சண்டையில் ஈடுபட்டார். தங்கள் நாட்டின் மிக உயர்ந்த குடும்பத்தின் இந்தச் சொத்துச் சண்டையை சிங்கப்பூர் மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.


ஒரு கட்டத்தில், லீ சியென் லூங்-இன் உடன்பிறப்புகள் அவரை 'மரியாதையை இழந்த மகன்' என்று அழைத்தனர். மேலும் அவர் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதற்காக தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், 'அரசின் நிர்வாக அமைப்புகளை' தங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அவரது சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர், துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ்கின்றனர்.


இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் லீ சியென் லூங் மறுத்துள்ளார். மேலும், தனது குழந்தைகளுக்கு அரசியலில் சேர விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?


சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் யார்?

லீ சியென் லூங் இப்போது தனது பதவியை, முன்னாள் பொருளாதார நிபுணரும் அரசு ஊழியருமான லாரன்ஸ் வோங்-இடம் ஒப்படைக்க உள்ளார். வோங் ஒரு கட்டத்தில் லீ-யின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றிய்வர்.


இது லாரன்ஸ் வோங்கிற்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் புதிய சூழ்நிலை ஆகும். சிங்கப்பூரின் 59 ஆண்டுகல சுதந்திர வரலாற்றில் 45 ஆண்டுகள் லீ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்திருக்கிறார். "அடுத்து பிரதமராகக் காத்திருக்கும் லீ குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இல்லாத முதல் பிரதமர் வோங் ஆவார். இது சிங்கப்பூர் சாதாரணமான ஒரு ஜனநாயகமாக மாறும் அறிகுறியாகும்," என்று டொனால்ட் லோ கூறினார்.


"சிங்கப்பூர் மீது லீ குடும்பத்தினர் எப்போதும் ஒரு அளவுக்கதிகமான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். இது மாறுவது ஒரு பரந்த சமூக அரசியல் மாற்றத்திற்கு நல்லது," என்று வடகெத் கூறினார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வோங் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட போது, அவரை அடுத்த பிரதமராக்கும் முடிவு அவருக்கு தந்தி மூலம் அனுப்பபட்டது. இது மக்கள் செயல் கட்சிக்கே உரித்தான ஒரு செயல்முறையாகும்.


ஆனால் ஆரம்பத்தில், 51 வயதான வோங் வெளிப்படையான ஒரு தேர்வாக இருக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னர்,மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர்கள் அறிமுகமான போது, அவர் பிரபலமற்றவராகப் பார்க்கப்பட்டார்.


மற்றொரு அமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் (Heng Swee Keat), அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி ஓய்வு பெறும் முன்பு வரை அவரைத்தான் பிரதமராக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.


கோவிட் பெருந்த்தொற்று சிங்கப்பூரைத் தாக்கியபோது, லாரன்ஸ் வோங் முக்கியப் பொறுப்பில் இருப்பார் என்பது தெளிவானது. அரசாங்கப் பணிக்குழுவின் இணைத் தலைவராக இருந்த அவர், சிங்கப்பூர் மக்களுக்குப் பரிச்சயமான முகமாக மாறினார். வாராந்திர செய்தியாளர் சந்திப்புகளில் சிக்கலான கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிதானமாக விளக்கினார்.


அவரது குழுவும், உள்ளூர் ஊடகங்களும் வோங்-இன் பிம்பத்தை ஒரு சாதரண மனிதராகப் பரப்பியிருக்கின்றன. பெரும்பாலான சிங்கப்பூர் மக்களைப் போலவே, அவர் ஒரு பொது வீட்டுக் குடியிருப்பில் வளர்ந்தார். மேலும் சிங்கப்பூரின் மேல்தட்டுப் பள்ளியில் பயிலாமல் உள்ளூர் பள்ளியில் படித்த முதல் பிரதமரும் வோங் தான்.



சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

'திறந்த மனம் கொண்ட பழமைவாதி'

லாரென்ஸ் வோங் அரசியலில் நுழைந்த போது ஒற்றுமையை முன்னிறுத்தினார். ஒரு நாடு தழுவிய ஆலோசனையை நடத்தி, மூத்த குடிமக்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிக ஆதரவுடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்குவதாக உறுதியளித்தார். 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகைக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சிங்கப்பூரின் குடிமக்கள் சிறுபான்மையினராக மாற மாட்டார்கள் என்றும், குடியேற்றம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.


சிங்கப்பூரின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளில் ஒன்றான அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையில் இருந்து எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் அரசு எந்த வல்லரசு நாட்டுக்கும் சார்பாக இல்லை, மாறாக, 'சிங்கப்பூர் சார்பாக' இருப்பதாக அவர் கூறினார்.


சிங்க்கப்பூர் ஆளுகை வல்லுநரான டொனால்ட் லோ லாரன்ஸ் வோங்க்-ஐ 'திறந்த மனம் கொண்ட பழமைவாதி' என்று விவரித்தார். அவர் மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்றவராக இருப்பார், ஆனால் அவற்றை 'அதிரடியாக' இல்லாமல் 'மெதுவாக, சிறிதுசிறிதாக' அறிமுகப்படுத்துவார், என்றார்.


அதனால்தான், அரசியல் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி செய்திருக்கும் பாதுகாப்பான தேர்வாக ஆய்வாளர்கள் லாரன்ஸ் வோங்-ஐப் பார்க்கிறார்கள். அவரும் இந்தப் பண்பை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகச் சமிக்ஞை செய்திருக்கிறார்.


"தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை முக்கிய விஷயங்களாகும். குறிப்பாக இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தை நெருங்கி வரும் இந்த நேரத்தில்," என்று திங்களன்று தனது அமைச்சரவையை வெளியிட்டபோது வோங் கூறினார்.


அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார். இது வோங்கின் மிகப்பெரிய அரசியல் பரீட்சையாக இருக்கும். லீ சியென் லூங்-இன் காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத் தேர்தலில் வோங் முதன்முறையாகப் போட்டியிடுவது முக்கியமான ஒன்றாக இருக்கும். .

 


கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவியிலிருந்து விலகுகிறார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) இன்று இரவு (புதன்கிழமை, மே 15) லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைப்பார்.


இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.


1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People's Action Party - PAP) சேர்ந்தவர்கள்.


சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew). அவர், தற்போது பதவி விலகும் லீ சியென் லூங்-கின் தந்தை, நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் பரவலாகக் கருதப்பட்டவர். 25 ஆண்டுகள் அந்நாட்டை வழிநடத்தியவர்.


லீ சியென் லூங் ஒரு மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்றாலும், இந்த மாற்றம், சிங்கப்பூரின் அரசியல் அவரது குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறுகிறது என்பதைக் குறிக்கிறது, என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


கடந்த வார இறுதியில் பிரதமர் என்ற முறையில் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த தனது இறுதிப் பேட்டியில், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.


"மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.


அவர் தனது தந்தை, மற்றும் அவருக்கு முன் இருந்த மற்றொரு பிரதமரான கோ சோக் டோங்க் (Goh Chok Tong) ஆகியோரது செயல்முறையிலிருந்து வேறுபட்ட பாணியில் 'காரியங்களை தன் வழியில் செய்ய' முயற்சித்ததாக அவர் மேலும் கூறினார்.


லீ சியென் லூங் 1984-இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க்-இன் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 2004-இல் அவர் அரசுக்குத் தலைமையேற்றார்.


அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. அரசியல் விமர்சகர்கள் லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதாகக் கூறினர். அதை லீ குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். தனிப்பட்ட உரையாடல்களில், சில சிங்கப்பூர் மக்கள் 'fami-Lee politics' என்று இதைக் கேலி செய்தனர்.


ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ சியென் லூங் தனது முத்திரையை பதித்தார்.


அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது. கடந்த 20 ஆண்டுகளில் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது. பல பொருளாதார மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போதெல்லாம் நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீ சியென் லூங்-இன் அரசாங்கத்திற்கு உண்டு.


பசிக்காமலேயே அதிகமாகச் சாப்பிடத் தூண்டி உடலைப் பருமனாக்கும் 'போலியான பசி' பற்றித் தெரியுமா?

15 மே 2024

கனடா வழங்கும் 'சூப்பர் விசா' - பெற்றோர், தாத்தா-பாட்டியை அழைத்துச் செல்லலாம்

14 மே 2024

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய இந்துக்கள் முஸ்லிம்களை எப்படி பார்க்கிறார்கள்?

14 மே 2024

சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லீ சியென் லூங்-இன் ஆட்சியில் சிங்கப்பூர் ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது

லீ சியென் லூங்-இன் அரசியல் பாதை

சர்வதேசப் புவிசார் அரசியலில், இப்பிராந்தியத்தில் இழுபறியிலிருந்த, அமெரிக்கா-சீனா போட்டியை லீ சியென் லூங் கவனமாக சமநிலைப்படுத்தினார். LGBTQ குழுக்கள் பல ஆண்டுகளாகப் பரப்புரை செய்ததைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை எதிர்ப்பு சட்டத்தை (anti-gay sex law) ரத்து செய்தது. இருப்பினும் சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


அவரது அரசியல் பரம்பரை மற்றும் மென்மையான, அறிவார்ந்த தோற்றம் ஆகியவற்றால், லீ சியென் லூங் பொதுவாக சிங்கப்பூர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகள் குறித்த கணக்கெடுப்பில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். அவரது தொகுதி, தேர்தல்களில் அதிக வாக்குச் சதவீதத்தைப் பெறுகிறது.


ஆனால் அவர் விமர்சனங்களிலிருந்தோ சர்ச்சைகளிலிருந்தோ தப்பவில்லை.


2000-களின் பிற்பகுதியில், தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிக்க அவரது அரசாங்கம் முடிவு செய்தது. இது ஆழ்ந்த அதிருப்தியைத் தூண்டியது. சிங்கப்பூர் செல்வச் செழிப்பாக மாறியதும், சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருமான இடைவெளி அதிகரித்தது. லீ சியென் லூங்-கின் கீழ், மக்கள் செயல் கட்சி 2011 மற்றும் 2020 இல் அதன் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றது.


ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் சிங்கப்பூர் ஆளுகை நிபுணரான டொனால்ட் லோ, "லீ சியென் லூங் பதித்த முக்கிய முத்திரை, அவர் பொருளாதாரத்தை மேம்படுத்திய விதம் தான்," என்று குறிப்பிட்டார்.


"ஆனால் அவரது பதவிக்காலத்தின் முதல் பாதியில், அந்த மேம்பாட்டுக்காக அதிகரித்து வந்த ஏற்றத்தாழ்வு, அதிக எண்ணிக்கையில் குடியேறிய வெளிநாட்டினர், வேலைவாய்ப்புகளுக்கான போட்டி, நெரிசல், மற்றும் குடியுரிமை அடையாள இழப்பு ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது," என்கிறார் அவர்.


அரசியல் விமர்சகர் சுதிர் வடகேத், லீ சியென் லூங்-இன் அரசாங்கம் "சிங்கப்பூரை ஒரு உலகளாவிய நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அதீத குடியேற்றத்தைச் சமாளிக்கத் தயாராக இருக்கவில்லை," என்றார்.


சிங்கப்பூர் மக்களிடம் இருந்து இதற்கான ஏற்பினைப் பெறாததால் இது இன்றுவரை இருக்கும் 'மிக மோசமான இனவெறி மற்றும் வெறுப்புக்கு' வித்திட்டது, என்று வடகேத் கூறினார். அவர் 'ஜோம்' என்ற சுதந்திர செய்தி இதழை நடத்துகிறார். சிங்கப்பூர் மக்கள் 'இனவெறி' தீவிரமடைந்து வரும் ஒரு பிரச்னையாக உணர்கிறார்கள் என்றும், கோவிட் பெருந்த்தொறின் போது இது தீவிரமடைந்தது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.


நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்னையான பொது வீட்டுக் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்னையை லீயின் அரசாங்கம் போதுமான அளவில் தீர்க்கவில்லை என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இந்தக் கட்டடங்களில் தான் வசிக்கின்றனர். பலரும் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து அரசாங்கத்திடமிருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு அவர்களுக்கு வயதாகும்போது குறையும்.


இந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டு, அரசாங்கம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மூலமும் கடுமையான விதிகள் மூலமும் அவற்றைத் தீர்க்க முயற்சித்துள்ளது.


நிலவில் கால் பதிக்க அமெரிக்கா - சீனா போட்டியில் உள்ளே நுழையும் இந்தியா - முந்தப் போவது யார்?

14 மே 2024

பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

18 ஏப்ரல் 2024

தங்கம் விலை ஏறுமுகம்: நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா?

16 ஏப்ரல் 2024

சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

பொது வெளியில் நடந்த குடும்பச்சண்டை

தனிப்பட்ட முறையில், லீ சியென் லூங்-இன் தந்தை லீ குவான் யூ இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அவருக்கு சொந்தமான வீட்டைச் சுற்றி நடந்த ஒரு குடும்பச் சண்டை 2016-இல் பொதுவெளிக்கு வந்தது. பிரதமர் லீ சியென் லூங் தனது உடன்பிறப்புகளுடன் பல ஆண்டுகளாக ஒரு பொதுச்சண்டையில் ஈடுபட்டார். தங்கள் நாட்டின் மிக உயர்ந்த குடும்பத்தின் இந்தச் சொத்துச் சண்டையை சிங்கப்பூர் மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.


ஒரு கட்டத்தில், லீ சியென் லூங்-இன் உடன்பிறப்புகள் அவரை 'மரியாதையை இழந்த மகன்' என்று அழைத்தனர். மேலும் அவர் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதற்காக தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், 'அரசின் நிர்வாக அமைப்புகளை' தங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அவரது சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர், துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ்கின்றனர்.


இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் லீ சியென் லூங் மறுத்துள்ளார். மேலும், தனது குழந்தைகளுக்கு அரசியலில் சேர விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?

11 ஏப்ரல் 2024

வெறும் 18,000 ரூபாயில் இலங்கை சென்று வரலாம் - காண வேண்டிய இடங்கள் என்ன? இ-விசா பெறுவது எப்படி?

5 மே 2024

மது அருந்தாமலேயே போதை ஏற்றும் விநோத நோய் - உடலுக்குள் ஆல்கஹால் உற்பத்தியாவது எப்படி?

13 மே 2024

சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் யார்?

லீ சியென் லூங் இப்போது தனது பதவியை, முன்னாள் பொருளாதார நிபுணரும் அரசு ஊழியருமான லாரன்ஸ் வோங்-இடம் ஒப்படைக்க உள்ளார். வோங் ஒரு கட்டத்தில் லீ-யின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றிய்வர்.


இது லாரன்ஸ் வோங்கிற்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் புதிய சூழ்நிலை ஆகும். சிங்கப்பூரின் 59 ஆண்டுகல சுதந்திர வரலாற்றில் 45 ஆண்டுகள் லீ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்திருக்கிறார். "அடுத்து பிரதமராகக் காத்திருக்கும் லீ குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இல்லாத முதல் பிரதமர் வோங் ஆவார். இது சிங்கப்பூர் சாதாரணமான ஒரு ஜனநாயகமாக மாறும் அறிகுறியாகும்," என்று டொனால்ட் லோ கூறினார்.


"சிங்கப்பூர் மீது லீ குடும்பத்தினர் எப்போதும் ஒரு அளவுக்கதிகமான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். இது மாறுவது ஒரு பரந்த சமூக அரசியல் மாற்றத்திற்கு நல்லது," என்று வடகெத் கூறினார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வோங் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட போது, அவரை அடுத்த பிரதமராக்கும் முடிவு அவருக்கு தந்தி மூலம் அனுப்பபட்டது. இது மக்கள் செயல் கட்சிக்கே உரித்தான ஒரு செயல்முறையாகும்.


ஆனால் ஆரம்பத்தில், 51 வயதான வோங் வெளிப்படையான ஒரு தேர்வாக இருக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னர்,மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர்கள் அறிமுகமான போது, அவர் பிரபலமற்றவராகப் பார்க்கப்பட்டார்.


மற்றொரு அமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் (Heng Swee Keat), அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி ஓய்வு பெறும் முன்பு வரை அவரைத்தான் பிரதமராக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.


கோவிட் பெருந்த்தொற்று சிங்கப்பூரைத் தாக்கியபோது, லாரன்ஸ் வோங் முக்கியப் பொறுப்பில் இருப்பார் என்பது தெளிவானது. அரசாங்கப் பணிக்குழுவின் இணைத் தலைவராக இருந்த அவர், சிங்கப்பூர் மக்களுக்குப் பரிச்சயமான முகமாக மாறினார். வாராந்திர செய்தியாளர் சந்திப்புகளில் சிக்கலான கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிதானமாக விளக்கினார்.


அவரது குழுவும், உள்ளூர் ஊடகங்களும் வோங்-இன் பிம்பத்தை ஒரு சாதரண மனிதராகப் பரப்பியிருக்கின்றன. பெரும்பாலான சிங்கப்பூர் மக்களைப் போலவே, அவர் ஒரு பொது வீட்டுக் குடியிருப்பில் வளர்ந்தார். மேலும் சிங்கப்பூரின் மேல்தட்டுப் பள்ளியில் பயிலாமல் உள்ளூர் பள்ளியில் படித்த முதல் பிரதமரும் வோங் தான்.


சமையலுக்கு எந்த பாத்திரம், எந்த அடுப்பு சிறந்தது? உணவில் ஊட்டச்சத்துகளை தக்க வைப்பது எப்படி?

13 மே 2024

பூமி அதிவேகமாகச் சுழன்றாலும் நாம் ஏன் தூக்கி வீசப்படுவதில்லை?

13 மே 2024

இயேசுவை பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்ன? இரு சித்தரிப்புகளில் எது உண்மை?

11 மே 2024

சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

'திறந்த மனம் கொண்ட பழமைவாதி'

லாரென்ஸ் வோங் அரசியலில் நுழைந்த போது ஒற்றுமையை முன்னிறுத்தினார். ஒரு நாடு தழுவிய ஆலோசனையை நடத்தி, மூத்த குடிமக்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிக ஆதரவுடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்குவதாக உறுதியளித்தார். 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகைக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சிங்கப்பூரின் குடிமக்கள் சிறுபான்மையினராக மாற மாட்டார்கள் என்றும், குடியேற்றம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.


சிங்கப்பூரின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளில் ஒன்றான அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையில் இருந்து எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் அரசு எந்த வல்லரசு நாட்டுக்கும் சார்பாக இல்லை, மாறாக, 'சிங்கப்பூர் சார்பாக' இருப்பதாக அவர் கூறினார்.


சிங்க்கப்பூர் ஆளுகை வல்லுநரான டொனால்ட் லோ லாரன்ஸ் வோங்க்-ஐ 'திறந்த மனம் கொண்ட பழமைவாதி' என்று விவரித்தார். அவர் மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்றவராக இருப்பார், ஆனால் அவற்றை 'அதிரடியாக' இல்லாமல் 'மெதுவாக, சிறிதுசிறிதாக' அறிமுகப்படுத்துவார், என்றார்.


அதனால்தான், அரசியல் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி செய்திருக்கும் பாதுகாப்பான தேர்வாக ஆய்வாளர்கள் லாரன்ஸ் வோங்-ஐப் பார்க்கிறார்கள். அவரும் இந்தப் பண்பை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகச் சமிக்ஞை செய்திருக்கிறார்.


"தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை முக்கிய விஷயங்களாகும். குறிப்பாக இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தை நெருங்கி வரும் இந்த நேரத்தில்," என்று திங்களன்று தனது அமைச்சரவையை வெளியிட்டபோது வோங் கூறினார்.


அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார். இது வோங்கின் மிகப்பெரிய அரசியல் பரீட்சையாக இருக்கும். லீ சியென் லூங்-இன் காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத் தேர்தலில் வோங் முதன்முறையாகப் போட்டியிடுவது முக்கியமான ஒன்றாக இருக்கும். .

 


புதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர், அடுத்த 2 மாதங்களில் உயிரிழந்துள்ளார்.


62 வயதான ரிச்சர்ட் 'ரிக்' ஸ்லேமேன் Richard "Rick" Slayman, 62, என்ற அந்த நபருக்கு மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இந்த சிறுநீரகம் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது சிறப்பாக வேலை செய்யும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.


அந்த மருத்துவர்கள் குழு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்லேமேன் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவர்கள் குழு ஆறுதல் தெரிவித்துள்ளது. அத்துடன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை காரணமாகவே ஸ்லேமேன் இறந்தார் என்பதற்கான எந்தவொரு அறிகுறிகளும் தென்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.


ஸ்லேமேன் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்கள் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அவர்களது அளவற்ற அர்ப்பணிப்பும், முயற்சிகளுமே ரிக்குடன் மேலும் 7 வார காலத்தை தங்களால் செலவழிக்க முடிந்தது என்று அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.


மார்ச் மாதம் அறுவை சிகிச்சை

உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர், ஏப்ரல் 2-ம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 62 வயதான அந்த நபருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம், அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.


அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் (MGH) இரண்டு வாரங்களாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ உலகில் புதிய சாதனையாக இந்த சிகிச்சை கருதப்படுகிறது.


பன்றி சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தம்

மருத்துவமனை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், மாசசூசெட்ஸ் மாகாணத்தின் வெய்மவுத் பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ‘ரிக்’ ஸ்லேமன் என்பவர், மிகத் தீவிரமான சிறுநீரக நோயுடன் போராடி வந்ததாகத் தெரிவித்தது. அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டதாகவும் மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது.


ஸ்லேமனின் மருத்துவர்கள் கடந்த மார்ச் 16ஆம் தேதி நான்கு மணிநேர அறுவை சிகிச்சையின் மூலம் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை அவரது உடலில் வெற்றிகரமாகப் பொருத்தினர்.


ஸ்லேமனின் சிறுநீரகம் இப்போது நன்றாகச் செயல்பட்டு வருவதாகவும், அவருக்கு இப்போது டயாலிசிஸ் செயல்முறை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஸ்லேமன் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில், மருத்துவமனையில் இருந்து வெளியேறி வீட்டிற்குச் செல்வது தனது வாழ்க்கையின் ‘மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று’ என்று கூறினார்.



‘இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தரும்’

சிறுநீரகச் செயலிழப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவம் பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த ஐந்து ஆண்டுகளில் eGenesis நிறுவனத்துடன் இணைந்து விலங்குகளின் உறுப்பை மனிதர்களுக்குப் பொருத்துவதற்கான (xenotransplantation) ஆராய்ச்சியையும் இம்மருத்துவமனை மேற்கொண்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஸ்லேமன் வெளியிட்டிருந்த அறிக்கையில், "பல ஆண்டுகளாக எனது வாழ்க்கையை பாதித்த டயாலிசிஸ் சுமையில் இருந்து விடுபட்டு, எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிவிடப் போவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்றார்.


கடந்த 2018ஆம் ஆண்டு, இறந்த ஒருவருடைய சிறுநீரகம், ஸ்லேமனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. ஆனால், அது கடந்த ஆண்டு தோல்வியடையத் துவங்கியது.


அதன்பிறகு மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை அவருக்குப் பொருத்தும் யோசனையை முன்வைத்தனர்.


"என் ஒருவனுக்கு உதவுவதற்கான வழி மட்டுமல்ல. உயிர் வாழ்வதற்கு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் ஒரு வழியாகவும் நான் இதைப் பார்க்கிறேன்," என்று அவர் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.


'பாரத் மாதா கி ஜெய்' முழக்கத்தை உருவாக்கியவர் ஓர் இஸ்லாமியரா? சுதந்திர போராட்டத்தில் என்ன நடந்தது?

1 ஏப்ரல் 2024

மெக்கா: இஸ்லாமை எதிர்த்த நகரம் அதே இஸ்லாமின் மையமாக உருவெடுத்தது எப்படி?

1 ஏப்ரல் 2024

உணவில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும்? அதிகமாக சேர்ப்பதால் என்ன பிரச்னை?

1 ஏப்ரல் 2024

இரண்டாவது சாதனை

சிறுநீரகச் செயலிழப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவம் பட மூலாதாரம்,MASSACHUSSETS GENERAL HOSPITAL

படக்குறிப்பு,அறுவை சிகிச்சை மூலம் 62 வயதான அந்த நபருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது

ஸ்லேமேனுக்கு பொருத்தப்பட்டுள்ள புதிய பன்றி சிறுநீரகம், கேம்பிரிட்ஜ் நகரில் இருக்கும் மருந்து நிறுவனமான இஜெனிசிஸ்(eGenesis) நிறுவனம், மரபணு முறையில் மாற்றியமைத்தது. அதில் ‘தீங்கு விளைவிக்கும் பன்றி மரபணுக்களை அகற்றி, மனிதர்களுடன் அதன் இணப்பதற்கான தன்மையை மேம்படுத்த சில மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டன,’ என்று அந்நிறுவனம் கூறியது.


இதே மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனைதான் 1954ஆம் ஆண்டு, உலகின் முதல் வெற்றிகரமான மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை – சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – மேற்கொண்டது.


மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இஜெனிசிஸ் நிறுவனத்துடன் இணைந்து விலங்குகளின் உறுப்பை மனிதர்களுக்குப் பொருத்துவதற்கான (xenotransplantation) ஆராய்ச்சியையும் இம்மருத்துவமனை மேற்கொண்டது.


இவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவையும் திறனையும் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சையைச் செய்து முடித்திருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.


மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?

29 மார்ச் 2024

சிறுத்தை நேருக்கு நேராக வந்தால் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

28 மார்ச் 2024

முதலைகளை கூட இரையாக்கும் ராட்சத மலைப்பாம்புகளை இவர்கள் பிடிப்பது எப்படி? ஏன்?

27 மார்ச் 2024

‘சிறுநீரகச் செயலிழப்புக்கு சிறந்த தீர்வு’

இந்தச் செயல்முறைக்கு, அமெரிக்காவின் தேசிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அந்த அமைப்பின் அதிகாரிகள், மிகத் தீவிரமான நோய்களால் அவதிப்படும் நபர்களுக்குக் கருணை அடிப்படையில் பரிசோதனை முறை சிகிச்சைகள் அளிப்பதற்கான அனுமதியை வழங்கினர்.


இந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் குழு, இதை ஒரு வரலாற்றுச் சாதனை என்று குறிப்பிட்டது. மேலும், இது உலகம் முழுவதும் நிலவி வரும் மாற்று அறுவை சிகிச்சைக்கான மாற்று உறுப்புகளின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வழியை வழங்கும் என்றும் கூறுகிறது. முக்கியமாக, சிறுமான்மை இனங்களைச் சேர்ந்த மக்களுக்கு மாற்று உறுப்புகள் கிடைப்பதில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளையும் இது தீர்க்கும் என்று அக்குழு தெரிவித்தது.


ஸ்லேமனுக்கு சிகிச்சையளித்த மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் மருத்துவர் வின்ஃப்ரெட் வில்லியம்ஸ், இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் கிடைக்கப்பெறும் அதிகப்படியான மாற்று உறுப்புகள், ‘அனைவருக்கும் சமமான மருத்துவமும் ஆரோக்கியமும் கிடைப்பதற்கான வழிவகையைச் செய்யும்’ என்று தெரிவித்தார்.


“இது சிறுநீரக செயலிழப்புக்கு ஆகச் சிறந்த தீர்வான, நன்கு வேலை செய்யும் ஒரு மாற்று சிறுநீரகத்தை, தேவைப்படும் அனைவருக்கும் வழங்கும்,” என்று மருத்துவர் வில்லியம்ஸ் கூறினார்.


பசுவின் சிறுநீரில் இந்தியர்கள் தயாரித்த 'இந்த நிறத்தை' பிரிட்டிஷார் தடை செய்தது ஏன்?

27 மார்ச் 2024

நூறாண்டுக்கு முன் காணாமல் போன ஜெர்மனி நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது?

27 மார்ச் 2024

வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, கருப்பட்டி ஆகிய மூன்றில் எது சிறந்தது? இனிப்பை அறவே தவிர்ப்பது சரியா?

26 மார்ச் 2024

தோல்வியடைந்த பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சைகள்

சிறுநீரகச் செயலிழப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவம் பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இதற்குமுன், இரண்டு பேருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்தன

அமெரிக்கத் தன்னார்வ நிறுவனமான ‘Network for Organ Sharing’ அமைப்பின் தரவுகள்படி, ஒரு லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க மக்களுக்கு உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.


ஆனால் 2023ஆம் ஆண்டு, இந்த மாற்று உறுப்புகளை தானமாகக் கொடுக்கக் கூடியவர்கள் – உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்களைச் சேர்த்து – 23,500 பேருக்கும் குறைவாக இருப்பதாக அத்தரவுகள் தெரிவிக்கின்றன.


மேலும், ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் மாற்று உறுப்புக்காகக் காத்திருக்கும் 17 பேர் உயிரிழப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மிகப் பரவலாகத் தேவைப்படும் உறுப்பு சிறிநீரகம்தான்.


பன்றியின் சிறுநீரகம் மனித உடலில் பொருத்தப்படுவது இது முதல்முறை என்றாலும், பன்றியின் ஒரு உறுப்பு மனித உடலில் பொருத்தப்படுவது இது முதல்முறையல்ல.


இதற்குமுன், இரண்டு பேருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்தன. அந்த இருவரும் சிகிச்சை முடிந்து சில வாரங்களிலேயே உயிரிழந்தனர்.


அவர்களில் ஒரு நபருக்கு, அவரது நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த இதயத்தை ஏற்றுக்கொள்ளாதாதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் இது பொதுவாக நிகழும் ஒரு

 


பல மேற்கத்திய நிறுவனங்களால் கட்டப்படும் ஒரு பாலைவன நகரத்திற்காக நிலத்தை கையகப்படுத்த மக்களை கொல்லவும் செய்யலாம் என சௌதி அரேபியாவின் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர், என்று முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.


நியோம் சுற்றுச்சூழல் திட்டத்தின் (Neom eco-project) ஒரு பகுதியான 'தி லைன்' (The Line) எனும் திட்டத்துக்கு வழிவகை செய்வதற்காக சவூதியில் உள்ள ஒரு பழங்குடியின மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்னல் ரபீஹ் அலெனேசி கூறுகிறார்.


அவர்களில் ஒருவர் வெளியேற்றத்திற்கு எதிராக போராடியதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.


சௌதி அரசும் நியோம் நிர்வாகமும் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.


நியோம், சௌதி அரேபியா சுமார் 42 லட்சம் கோடி இந்திய ரூபாய் மதிப்பில் (500 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் பிராந்தியம். இது சௌதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது அந்த ராஜ்யத்தின் பொருளாதாரத்தை எண்ணெயிலிருந்து விலக்கி பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அதன் முதன்மைத் திட்டமான 'தி லைன்', வெறும் 200மீ (656 அடி) அகலமும் 170கி.மீ. நீளமும் கொண்ட கார்கள் செல்லாத நகரமாகத் திகழ்கிறது. இருப்பினும் இந்தத் திட்டத்தின் 2.4கி.மீ. மட்டுமே 2030-க்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சௌதி அரேபியா, நியோம், மனித உரிமைகள் 

அழிக்கப்படும் கிராமங்கள்

நியோமின் கட்டுமானத்தில் பல உலகளாவிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றில் பல பிரிட்டிஷ் நிறுவனங்களும் அடங்கும்.


நியோம் கட்டப்பட்டு வரும் பகுதியை, சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 'ஒரு வெற்று நிலம்' என்று விவரிக்கிறார். ஆனால் அவரது அரசாங்கத்தின் படி 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த திட்டத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தை இயங்கு தளமாகக்கொண்ட மனித உரிமைகள் குழுவான ALQST இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.


இடிக்கப்பட்ட கிராமங்களில் அல்-குரைபா, சர்மா மற்றும் கயால் ஆகிய மூன்று கிராமங்களின் செயற்கைக்கோள் படங்களை பிபிசி ஆய்வு செய்துள்ளது. வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டன.


கடந்த ஆண்டு சவூதியிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடிபுகுந்த கர்னல் அல்-எனேசி, 'தி லைனுக்கு' தெற்கே 4.5கி.மீ. தொலைவில் உள்ள அல்-குரைபா எனும் இடத்தில் நிலத்தைக் கையகப்படுத்த தநக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறுகிறார். இந்த கிராமங்களில் பெரும்பாலும் ஹுவைதாட் பழங்குடியினர் வசிக்கின்றனர், அவர்கள் நாட்டின் வடமேற்கில் உள்ள தபூக் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.


கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடுக்கப்பட்ட உத்தரவில் ஹுவைதாட் இனம் 'பல கிளர்ச்சியாளர்களால்' உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 'வெளியேற்றப்படுவதை எதிர்க்கும் எவரும் கொல்லப்பட வேண்டும், எனவே அது அவர்களின் வீட்டில் தங்கியிருந்தவர்களுக்கு எதிராக கொடிய வன்முறையைப் பயன்படுத்த உரிமம் வழங்கியது,' என்றும் அவர் கூறினார்.


தனது உடல்நிலை சரியில்லை என்று பொய்சொல்லி அவர் இந்தப் பணியிலிருந்து விலகினார், என்று அவர் பிபிசியிடம் கூறினார், ஆனால் அந்தப் பணி செய்துமுடிக்கப்பட்டது.


101 வயது மூதாட்டிக்கு குழந்தைக்கான பயணச்சீட்டைத் தரும் விமான நிறுவனம் - என்ன காரணம்?


படக்குறிப்பு,கர்னல் அல்-எனேசி

எதிர்த்ததற்காகக் கொல்லப்பட்டவர்

அப்துல் ரஹீம் அல்-ஹுவைதி எனும் நபர் தனது சொத்துக்களை மதிப்பிடுவதற்கு நிலப்பதிவுக் குழுவை அனுமதிக்க மறுத்துவிட்டார். அதற்கு அடுத்த நாள், அனுமதிப் பணியின் போது சௌதி அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பு, வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.


அந்த நேரத்தில் சௌதி அரசின் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், அல்-ஹுவைதி பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்கள் பதிலடி கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.


ஆனால், மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா-வும் அவர் வெளியேற்றத்தை எதிர்த்ததற்காக கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.


கொடிய வன்முறை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது பற்றிய கர்னல் அலெனேசியின் கருத்துகளை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.


ஆனால் சௌதி உளவுத்துறை இயக்குநரகத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒருவர், கர்னலின் சாட்சியம் பொதுவாக இதுபோன்ற பணிகள் பற்றி அவர்கள் அறிந்தவற்றுடன் ஒத்துப்போகிறது என்றார். பணியை வழிநடத்த கர்னலின் பணிமூப்பு நிலை பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


ஐ.நா மற்றும் ALQST-இன் படி, குறைந்தபட்சம் 47 கிராமவாசிகள் வெளியேற்றத்தை எதிர்த்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் பலர்மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. அவர்களில் 40 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர். அவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று ALQST கூறுகிறது.


அல்-ஹுவைதியின் மரணத்திற்கு சமூக ஊடகங்களில் பகிரங்கமாக இரங்கல் தெரிவித்ததற்காக பலர் கைது செய்யப்பட்டதாக ALQST குழு தெரிவித்துள்ளது.


'தி லைன்' திட்டத்திற்காக சொந்த இடத்தைவிட்டுச் செல்ல வேண்டியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக சௌதி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ALQST-இன் படி, கொடுக்கப்பட்ட இழப்பீடு வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை விட மிகக் குறைவாக உள்ளது.


கர்னல் அல்-எனேசியின் கூற்றுப்படி, "[நியோம்] முகமது பின் சல்மானின் மிக முக்கியமான யோசனையாகும். அதனால்தான் அவர் ஹுவைதாட் விவகாரத்தில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார்."


பேரரசர் அக்பரை பித்து பிடிக்க வைத்த மாம்பழம் - வரலாற்றில் என்னவெல்லாம் செய்தது?


'ஒடுக்கப்படும் மக்கள்'

நியோமின் பனிச்சறுக்கு திட்டத்தின் முன்னாள் மூத்த நிர்வாகியான ஆண்டி விர்த், அப்பணியில் சேர்வதற்கு 2020-இல் தனது சொந்த நாடான அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அப்துல் ரஹீம் அல்-ஹுவைதி கொல்லப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டதாக பிபிசியிடம் கூறினார். வெளியேற்றங்கள் குறித்து தனது முதலாளிகளிடம் பலமுறை கேட்டதாக ஆண்டி விர்த் கூறுகிறார், ஆனால் கிடைத்த பதில்களில் அவர் திருப்தி அடையவில்லை.


"இந்த மக்கள் மீது பயங்கரமான ஏதோவொன்று சுமத்தப்பட்டுள்ளது என்று தோன்ரறியது. நீங்கள் முன்னேறுவதற்காக அவர்களின் தொண்டையை உங்கள் பூட் கால்களால் மிதிக்காதீர்கள்," என்று அவர் கூறினார்.


அவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள், அதன் நிர்வாகத்தின் மீது வெறுப்படைந்தார்.


கடந்த 2022-ஆம் ஆண்டில் 'தி லைனுக்கான' ரூ.834 கோடி செலவில் (100 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கட்டமைக்கப்படும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து விலகிய ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மால்கம் ஆவ்-உம் மிகவும் முக்கியமானவர்.


"அந்தப் பகுதியில் வசிக்கும் சில மேல்தட்டு பணக்கார நபர்களுக்கு இது நன்றாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு?" என்று கேட்கிறார் சோலார் வாட்டர் பிஎல்சி-யின் தலைமை நிர்வாக அதிகாரி மால்கம் ஆவ்.


உள்ளூர் மக்கள் அந்தப் பகுதியை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள், அதனால் அவர்கள் மதிப்புமிக்கச் சொத்துக்களாகப் பார்க்கப்பட வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.


"அவர்களை அகற்றாமல், மேம்படுத்த, உருவாக்க, மீட்டுருவாக்கம் செய்ய, நீங்கள் ஆலோசனை செய்ய வேண்டும்," என்றார்.


சௌதி அரேபியா, நியோம், மனித உரிமைகள் 

'இது இரு போர்'

இடமாற்றம் செய்யப்பட்ட கிராம மக்கள், வெளிநாட்டு ஊடகங்களுடன் பேசினால் அது தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களுக்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும் என்று அஞ்சி கருத்து தெரிவிக்க மிகவும் தயங்கினார்கள்.


ஆனால் 'சௌதி விஷன் 2030'-இன் வேறொரு திட்டத்திற்காக வேறு இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களிடம் பேசினோம். மேற்கு சௌதி அரேபிய நகரமான ஜெத்தா மத்திய திட்டத்திற்காக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது ஒரு நாடக அரங்கம், விளையாட்டு மாவட்டம் மற்றும் உயர்தர வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பிரிவுகளை உள்ளடக்கியது.


நாதிர் ஹிஜாஸி [அவரது உண்மையான பெயர் அல்ல] ஆஸிஸியா-வில் வளர்ந்தவர். இந்தத் திட்டத்திற்காக இடிக்கப்பட்ட சுமார் 63 சுற்றுப்புறங்களில் இதுவும் ஒன்று. அவரது தந்தையின் வீடு 2021-இல் இடிக்கப்பட்டது. அந்த முடிவு அவருக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் முன்பே தெரிவிக்கப்பட்டது.


ஹிஜாஸி கூறுகையில், தனது முன்னாள் வசிப்பிடத்தின் புகைப்படங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்றார். அவை போர் மண்டலத்தை நினைவூட்டியதாகக் கூறினார்.


"அவர்கள் மக்கள் மீது ஒரு போரை நடத்துகிறார்கள், எங்கள் அடையாளங்களின் மீது ஒரு போரை நடத்துகிறார்கள்," என்றார்.


அச்சத்தில் இருக்கும் மக்கள்

கடந்த ஆண்டு ஜெத்தா இடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களைப் பற்றி சௌதியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஒருவர் வெளியேற்றத்தை எதிர்த்ததற்காகவும், மற்றவர் தனது சமூக ஊடகங்களில் எதிர்ப்பு ஓவியங்களை வெளியிட்டதற்காகவும் கைது செயப்பட்டனர்.


மேலும் ஜெத்தாவின் தஹ்பான் மத்திய சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதியின் உறவினர் ஒருவர், மேலும் 15 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் கதைகளைக் கேட்டதாகக் கூறினார். அது, இடிப்பதாக முடிவுசெய்யப்பட்ட ஒரு சுற்றுப்புறத்தில் பிரியாவிடை கூட்டத்தை நடத்தியதற்காக எனக் கூறப்பட்டது. சௌதி சிறைகளுக்குள் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது மிகச் சிரமம். அதனால், இதை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.


ALQST அமைப்பு, ஜெத்தா சுற்றுப்புறங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 35 பேரிடம் பேசியது. அவர்களில் யாரும், உள்ளூர் சட்டத்தின்படி இழப்பீடு அல்லது போதுமான எச்சரிக்கையைப் பெற்றதாக கூறவில்லை. மேலும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கைது அச்சுறுத்தலின் கீழ் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகக் கூறினர்.


கர்னல் அல்-எனேசி இப்போது இங்கிலாந்தில் இருக்கிறார். ஆனால் அவரது பாதுகாப்பிற்காக இன்னும் பயப்படுகிறார். சௌதியின் உள்துறை அமைச்சருடன் லண்டனின் சௌதி தூதரகத்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டால், தனக்கு சுமார் ரூ.42 கோடி (5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படும் என்று ஒரு உளவுத்துறை அதிகாரி தன்னிடம் கூறியதாக அவர் கூறுகிறார். ஆனால் அல்-எனேசி மறுத்துவிட்டார்.


பிபிசி இதுபற்றி சௌதி அரசாங்கத்திடம் கேட்டது ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.


இதற்கு முன்னரும் வெளிநாட்டில் வாழும் சௌதி அரசாங்கத்தின் விமர்சகர்கள் மீதான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.


கடந்த 2018-ஆம் ஆண்டு, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருக்கும் சௌதி தூதரகத்திற்குள் வைத்து, சௌதி முகவர்களால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை வழக்கு இதில் முக்கியமானது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட அவரது கொலைக்கு முஹம்மது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஆனால் பட்டத்து இளவரசர் இதனை மறுத்துள்ளார்.


ஆனால் சௌதியின் எதிர்கால நியோம் நகரம் தொடர்பான உத்தரவுகளை மீறும் தனது முடிவைப் பற்றி கர்னல் அல்-எனேசிக்கு வருத்தம் இல்லை.


"முகமது பின் சல்மான் நியோம் நகரம் கட்டபடுவதை யாரும் எதுவும் தடுப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார். எனது சொந்த மக்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் அவர்கள் எனக்கு உத்தரவிடுவார்களோ என்று நான் அதிகம் கவலைப்பட்டேன்," என்கிறார் அவர்.


 கண்டி #இலங்கையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க போகம்பரா சிறைச்சாலை கட்டிட வளாகம் ஹோட்டலாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. முதலீட்டாளரும் அபராதம் விதித்துள்ளார்.

போகம்பரா சிறையில் இலங்கையில் தூக்கு மேடை இருந்தது. 2014ல் சிறை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.


 Article by #KL.Nizaam.

 அதென்ன வல்லப்பட்டை..? இதன் முக்கியத்துவம் என்ன? இலங்கையில் எங்கே வளர்கின்றது என்றும் அதன் பொருளாதார முக்கியத்துவமும் என்ன? 


இலங்கைக்குள் பாதுகாக்கப்படும்  அழிந்து  வரும் அரிய தாவர இனங்களில் #கருங்காலி, #மூதுரை, #வல்லபட்டா அரசின் அனுமதி பெற்று வளர்க்கலாம்.  இந்த மரங்கள் உலகில் தேவை  அதிகமுள்ள  விலை உயர்ந்த பொருளாதார தாவர இனங்கள் ஆகும். 


இலங்கையின் அகர்வூட்  வல்லா பட்டா

---------------------------------------------------------------------


அகில் எனப்படும் Agar wood (Aquilaria malaccensis) நறுமணப் பொருள்களின் தயாரிப்புக்காகப் பெறப்படும் அகிற்கட்டைகளின் முதன்மையான வளப்பொருள் ஆகும்.  அகில் கட்டைகளுக்காகப் பெரு மதிப்பு மிக்கதாகக் கருதப்படும் தாவர இனம். மரங்களின் கடவுள் என்றும், வாசனை திரவியங்களின் அரசன் என்றும், பசுமைத் தங்கம் என்றும் 3000-ஆம் ஆண்டு வரலாறு  கொண்டது. இது உலகின் மிக விலையுயர்ந்த இயற்கை மூலப்பொருட் காடுகளில் ஒன்றாகும், 


தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட Thymelaeaceae குடும்பத்தில், பதினைந்து  மரங்களின் ஒரு இனமாகும். இது லிக்ன் கற்றாழை அல்லது லிக்-அலோஸ் மரங்கள் என்று அழைக்கப்படுகிறது.


அகார்வுட் இனங்கள் தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ், மலேசியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா நாடுகள் பெரிய அளவுகளில் சந்தைக்கு உற்பத்தி செய்வதில் பிரபலமானவை.


உலகின் சிறந்த தரமுள்ள அகார்வுட் ( அக்விலாரியா கிராஸ்னா இனங்கள் ) உற்பத்தி நாடுகளில் ஒன்றாக வியட்நாம் கருதப்படுகிறது.  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இயற்கை காட்டு அகர்வூட் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் பரவலாக சுரண்டப்படுகிறது. 


Thymelaeaceae இனங்கள்

--------------------------------------------


முக்கிய இனங்கள் Aquilaira, Gyrinops, Aetoxylon மற்றும் Gonystylus. என அறிவியல் பூர்வமாக அறியப்படுகின்றன. அந்த நான்கு வகைகளில், முதல் இரண்டு சந்தையில் மிகவும் பிரபலமானவை. 


இலங்கையில் வளரும் ஒரே அகர்வூட் இனம்  Gyrinops Walla மட்டுமே, இது உள்ளூர் என்று நம்பப்படுகிறது. Walla patta இலங்கைக்குச் சொந்தமானது என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன, முக்கியமாக மற்ற நாடுகளின்   அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.


Gyrinops Walla வல்லப்பட்டை அகில் மரங்களின் Agar wood (Aquilaria) இனத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன. 


Agar wood -  அகில் வாசனை திரவியம் 

-------------------------------------------------------------------


Thymelaeaceae குடும்பத்தின் சில மர வகைகளின் தண்டுகள், கிளைகள் மற்றும் வேர்களில் உற்பத்தி செய்யப்படும் மிகவும் மணம் மற்றும் மிகவும் மதிப்புமிக்க பிசின் ஆகும். உலகின் மிக விலையுயர்ந்த மரம். 


Aquilaria மற்றும் Gyrinops இனங்களில் உள்ள மர இனங்களால் உற்பத்தி செய்யப்படும் அகர்வூட், இயற்கை வாசனை திரவியம் மற்றும் தூபங்களின் மதிப்புமிக்க ஆதாரமாகும், 


இது மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் தனித்துவமான வாசனை வெளியிடுகிறது. உலகில் இதே போன்ற நறுமணம் இல்லை


அகில் மரத்தின் தரம் அக்விலாரியா மரத்தின் வளர்ச்சி வயதைப் பொறுத்தது அல்ல, மரத்தின் தொற்று நேரத்தைப் பொறுத்தது. 


அகர்வூட் இயற்கையாகவே மரங்களுக்குள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பூஞ்சை, பாக்டீரியா போன்ற தண்டுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க மரத்தின் இயற்கையான பாதுகாப்பு பொறிமுறையின் விளைவாக இது தயாரிக்கப்படுகிறது. அம்ப்ரோசியா எனும் வண்டு தாக்கத்திலிருந்து  மரத்தை அதன் பிசின் பாதுகாக்கின்றது. 


மரத்தில் உருவாகும் பிசின் வடிவதில்லை. சற்று முதிர்ந்த மரத்தில் சில இடங்கள் கருப்பாக இருக்கும். அதில் ஒருவித எண்ணெய்ப் பிசின் உள்ளது. பிசின் கிளைகள் கலக்கும் இடத்தில் சாதாரணமாக உண்டாகும் ஒரு விதக் காளான் அல்லது பூஞ்சை தான் அகில் உண்டாவதற்குக் காரணம். நல்ல மரங்களில் காளான், பூஞ்சை அதிக அளவில் பற்றியிருக்கும்.


இந்த கரிய பூஞ்சண வகை தொற்று ஏற்படும் போது அதனை எதிர்ப்பதற்காக மரத்தின் தண்டுப்பகுதியில் நறுமணத்துடன் கூடிய ஒரு பிசின் சுரக்கும். இதுதான் 'அகில் பிசின்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிசின்தான் அதிக விலை மதிப்புள்ள பொருள்.  


இயற்கை அகர்வூட்டின் பண்புகள்

-----------------------------------------------------------


வண்ணங்கள்:-

                    நறுமண எண்ணெய் வெட்டப்படடட  பகுதியிலிருந்து உருவாக்கப்படுகிறது. அது எண்ணெயின் அளவைப் பொறுத்து, அகர்வூட்டாக மாறும். மரப் பகுதியில் எண்ணெயைக் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டிருக்கும்.


அகர்வூட் மணிகளின் நிறங்கள்

மர மணிகளில் உள்ள எண்ணெயின் அளவைப் பொறுத்து, மணிகள் மஞ்சள், பழுப்பு மற்றும் கருப்பு நிறமாக இருக்கும். அதில் எவ்வளவு எண்ணெய் இருக்கிறதோ, அது கருமையாக இருக்கும். எண்ணெய் இல்லாத மர மணி தந்தம்-வெள்ளை நிறமாக இருக்கும்


சுவை, வாசனை

         அகர்வூட்டின் சுவை கசப்பாக இருக்கும். அகர்வூட்டின் வாசனை மிகவும் சிறப்பு வாய்ந்தது.


பொருளாதார முக்கியத்துவம்

-----------------------------------------------------


அதோடு தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவில் உள்ள அகார்வுட்  வாசனை திரவிய தயாரிப்புக்கு  பெரிய தேவை காணப்படுகிறது.


சாதாரண விலை வரம்பு 400 - 16,000 யூரோ  யூரோ இருக்கும். மிக உயர்ந்த தரம் வாய்ந்த ஒரு கிலோ அகில்  கட்டைக்கு 250,000 யூரோக்கள் வரை விலை இருக்கும், அகில் மரத்திலிருந்து பெறப்பட்ட எண்ணெய் உலகில் மிகவும் விலை உயர்ந்த ஒன்றாகும்.


அகர்வூட் பிசினின் மதிப்பு மரத்தின் ஓலியோரெசின் உள்ளடக்கத்தைப் பொறுத்தது.  தரம் A, B, C அல்லது D இல்  வெவ்வேறு குணங்கள் உள்ளன. அனைத்தும் உயர்ந்த விலை வரம்புகளில் விற்பனை செய்யப்படுகிறது. அகர்வூட் அதிக விலையுள்ள வகைகள் தங்கத்தின் விலையை விட உயர்ந்த விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. மிகவும் மதிப்புமிக்கது.


நுகர்வோர் நாடுகளில் குறைந்த தரம் வாய்ந்த பொருட்களுக்கு ஒரு கிலோவிற்கு சில டாலர்கள் முதல் உயர்தர மரத்திற்கு ஒரு கிலோவிற்கு 30,000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும்.


அகர்வூட் எண்ணெய் உற்பத்தி

------------------------------------------------------


உலர்ந்த அகர்வூட்டை வடிகட்டும்போது, ​​எண்ணெயின் எடையால் சுமார் 0.12–7% பெறப்படுகிறது, (அதாவது ஒரு கிலோவிற்கு 1.2–70 மில்லி) எண்ணெய் பிரித்தெடுக்கும் முறை மற்றும் மரத்தின் தரமும் மிக முக்கியமானது. ''அகர் எண்ணெய், எடுப்பதற்கு நிறைய தொழில்நுட்பங்கள் தேவை. 


அகார்வுட் எண்ணெய் பிரித்தெடுத்தலுக்கு ஹைட்ரோ-டிஸ்டிலேஷன், கரைப்பான் பிரித்தெடுத்தல் மற்றும் சூப்பர் கிரிட்டிகல் திரவம் பிரித்தெடுத்தல் போன்ற பல்வேறு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நுட்பத்திற்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. 


அகர்வூட் எண்ணெய் பிரித்தெடுப்பிற்கு தற்போது வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் கிளாசிக்கல் முறை ஹைட்ரோ-டிஸ்டிலேஷன் ஆகும். இந்த முறை 7-10 நாட்கள் மற்றும் பிரித்தெடுப்பதற்கு அதிக ஆற்றலைப் பயன்படுத்துகிறது. 


அகர்வூட்டின் பயன்கள்

----------------------------------------


அரேபியாவில் உட் அல்லது oud என்று புகைபிடிக்கும் மரம் சந்தைகளிலும் பஜாரிலும் சிறிய சில்லுகளில் புகைபிடிக்க பயன்படுகிறது


ஜப்பானிய Kō-Dō விழாவில், மரம் மிக முக்கியமான தூபமாக பயன்படுத்தப் படுகிறது.


இதை துணிகளில் தூவி வைத்தால் பூச்சி பிடிக்காது. ஊதுபத்தி, அகர்பத்தி செய்யவும் பிசின் பயன்படுகிறது.  


வாசனை திரவிய உற்பத்திக்கு அகர்வூட்டின் பயன்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீண்டுள்ளது, மேலும் இது பழைய ஏற்பாட்டில் பல முறை ‘கற்றாழை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி குறிப்பிடப்படுகிறது. 


ஆசியாவில்  பவுத்தர்கள் மற்றும் முஸ்லீம்களால் மத, மருத்துவ, சடங்கு நடவடிக்கைகளுக்கு அகர்வூட் பிசின் மிகவும் விரும்பப்படுகிறது. 


அகர்வூட் மரத்தின் பட்டை பல்வேறு இடங்களில் எழுதும் பொருளாக பயன்படுத்தப்பட்டது. சுமத்ராவில் உள்ள டோபா-படாக்கில், மந்திர பூசாரிகள் (டட்டு) அகர்வூட் மரத்தின் பட்டைகளை தங்கள் ஆரக்கிள் புத்தகங்களை தயாரிக்க பயன்படுத்தினர். அகார்வுட் மரத்தின் பட்டை ( சஞ்சிபட் என குறிப்பிடப்படுகிறது) வடகிழக்கு இந்திய நகரமான அசாமில் எழுதும் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது. 


மேற்கத்திய வாசனை திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன,


பட்டையிலுள்ள நார் காகிதம் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. 


அகில் சந்தனக் கட்டைக்கு அடுத்து மருத்துவ உலகிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்ற ஒன்றாகும். பலவித நோய்களைக் குணப்படுத்தும் இயல்பு கொண்ட அகில் சந்தனமர வகையைச் சேர்ந்த மர வகைகளில் ஒன்று. காடுகளில் பல இடங்களில் சந்தன மரத்தை ஒட்டியே அகில் மரங்களும் வளர்ந்திருப்பதைக் காணலாம். 


அறுவடை செய்யும் சமயத்தில் மரத்தின் நிறம், குணம், மணம், நீரில் மூழ்கும் தன்மை மற்றும் மரத்தின் அடர்த்தி போன்ற பல காரணிகளை மையமாக வைத்துதான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சரியான சீதோஷ்ண நிலையில் வளரும் மரங்களில் மேற்கூறிய பண்புகள் சிறப்பாக இருக்கும். 


செயற்கையாக பூஞ்சணங்களை செலுத்தி பிசின் எடுப்பதற்கான முயற்சிகளும் இன்னும் சோதனை அடிப்படையில்  உள்ளன. 


அகர்வூட்  தற்போதைய நிலைமை

------------------------------------------------------------


அகர்வூட்டுக்கான சர்வதேச தேவை அதிகரித்து வருகிறது, இது வளரும் இடங்களின் இழப்புக் காரணமாக அழிந்து வரும்  இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 


கடந்த தசாப்தத்தில் இது அனைத்து அகர்வூட் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வந்திருக்கின்றது. சட்டவிரோத  செயல்பாடுகள் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் செய்யும் முதிர்ந்த மரங்களின்  சதவீதத்தை குறைக்கிறது.


தாழ்வான வன வாழ்விடங்களின் இழப்பு இந்த மரங்களின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. அகர்வூட் உற்பத்தி செய்யும் இனங்கள் கண்டுபிடிக்க மிகவும் கடினமாகி வருகின்றன, தொடர்ந்து நோயற்ற மரங்கள் அதிகளவில் வெட்டப்படுகின்றன.  பாதுகாக்கப்பட்ட 

பகுதிகளுக்குள் சேகரிப்பு நடைபெறுகிறது.


ஆகார்வுட் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து Aquilaria மற்றும் Gyrinops உயிரினங்களின் இயற்கை வளங்களை கடுமையாக பாதித்துள்ளது,


2004 முதல் Aquilaria மற்றும் Gyrinops இனங்களின் அனைத்து Agarwood இனங்களின் தாவரங்கள் மற்றும் மரங்களின் பகுதிகள் ஆபத்தான உயிரினங்களான காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) உள்நாட்டு வர்த்தகத்திற்கான மாநாட்டின் பின் இணைப்பு II இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இணைப்பு I இல் ஒன்று இலங்கையில் காணப்படும் Gyrinops walla பாதுகாக்க வேண்டிய தாவரம்.


Walla patta - வல்லா பட்டா

--------------------------------------------


இலங்கைக்குள் Gyrinops walla என்று விஞ்ஞான ரீதியாக அறியப்பட்ட வல்லா பட்டா, சில ஆண்டுகளுக்கு முன்பு வணிக மதிப்பு இல்லாத ஒரு மரம், திடீரென இலங்கையில் அடிக்கடி  கடலினுடாக கடத்தப்படுவதில் மேற்கொண்ட முயற்சியால் திடீரென வெளிச்சத்திற்கு வந்தது. கடத்தலுக்கான காரணம் இந்த குறிப்பிட்ட மரத்தின் தண்டுக்குள் உற்பத்தி செய்யப்படும் அகர்வூட் எனப்படும் பிசின் திசு என்று நம்பப்பட்டது.


Gyrinops  மரங்களின் எட்டு இனங்கள் காணப்படுகின்றன.  


1.கிறினொப்ஸ் வல்ல ( Gyrinops Walla) 

2.கிறினொப்ஸ் கோடேட்டா (Gyrinops caudata) 

3.கிறினொப்ஸ் டெசிபியன்ஸ (Gyrinops decipiens)   

4.கிறினொப்ஸ் லெடமெனீ (Gyrinops ledermanii)

5.கிறினொப்ஸ் மொலுகானா  (Gyrinops moluccana)

6.கிறினொப்ஸ் போடோகார்பர்ஸ் (Gyrinops  podocarpus)

7.கிறினொப்ஸ் ஸலிசிபோலியா (Gyrinops  salicifolia)

8.கிறினொப்ஸ் வெர்ஸ்டீஜி (Gyrinops  versteegi)


.


இலங்கையில், அகர்வூட்டின் இனிமையான வாசனை வர்த்தக அழைப்புகளை ஈர்க்கிறது

இதன் பொருளாதார முக்கியத்துவம்  அதன் கேள்விக்கும் தேவைக்கும் அமைய மாறுபடுகின்றது,


Walla patta ஒரு நடுத்தர உயர மரமாகும். 

இது 15 மீட்டர் உயரம் வரை நேராக, மெல்லிய தண்டுடன் சிறிய, வட்டமான கிரீடத்துடன் வளரும். பசுமையான மரம், அடர் பச்சை மெல்லிய இலைகளைக் கொண்டது, சிறிய வெள்ளை பூக்கள் 1 செ.மீ அகலம் கொண்டது. இது மெல்லிய, பழுப்பு-சாம்பல் பட்டைகளை தாங்கி மென்மையாகவும் வலுவாகவும் நார்ச்சத்து கொண்டது. 


மரம் வாசனை திரவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் அகர்-வூட் எனப்படும் முதல் தர பிசினை உருவாக்குகிறது. Walla patta  அனைத்து மரங்களிலும் வாசனைத் திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பிசின் உருவாகுவதுமில்லை.  


மூலிகையாக பயன்படுத்தும் போது . அவதானம் தேவை. ஓவர் டோஸ் நச்சுத்தன்மையாக இருக்கலாம் .


வல்லப்பட்டை  வெசாக்கூடு கட்டுவதற்கு, மண்வீடுகள்  தயாரிப்பதற்கு வரிச்சி கட்டுவதற்கும்,கயிறுபோல் பிணைக்கும் பொருளாக  ஆரம்பகாலங்களில்  பயன்படுத்தப்பட்டுள்ளன.


இலங்கையில் வனப்பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் இலவங்கப் பட்டையின் வெற்றியை சுட்டிக்காட்டி, இப்போது அவை வீட்டுத் தோட்டங்கள் மற்றும் வணிகத் தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 


Walla patta - அகர்வூட் ஆய்வுகள்

-------------------------------------------------------


ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழக வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் டாக்டர் உபுல் சுபசிங்க மற்றும் அவரது குழுவினர் Walla patta வில் அகர்வூட் தயாரிப்பதில் ஆதாரங்களை அடையாளம் காண முதல் முறையாக முன்னோடியாக இருந்தனர். அவர்களின் ஆரம்ப ஆய்வுகள் Walla patta ஸால் தயாரிக்கப்பட்ட அகர்வூட்டின் தரம், Aquilaria இனங்களால் உற்பத்தி செய்யப்படும் சந்தையில் கிடைக்கிறது என்பதை நிரூபித்துள்ளது. 


இப்போது அவரது குழு வல்லா பட்டவுக்கு கிடைத்த தனித்துவமான ரசாயனங்கள் மற்றும் செயற்கை பிசின் தூண்டல் முறைகளை அடையாளம் காண்பது குறித்து மேலும் ஆய்வு செய்து வருகிறது.

தற்போதைய ஆய்வு ஜி.வல்லாவிலிருந்து அகர்வூட் வகை பிசின் பகுப்பாய்வு செய்ய ஒரு பயனுள்ள GCMS முறையை உருவாக்கியுள்ளது. மரங்களின் விட்டம் மற்றும் உயரங்கள் மரங்களின் மாதிரிகளில் வேறுபடுகின்றன, அவை பிசின் உருவாக்கத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. வேதியியல் வேறுபாடுகள் கணிசமாக அதிகமாக இருந்தபோதிலும் பிசின் உள்ளடக்கங்கள் மூன்று மாதிரிகளிலிருந்தும் கணிசமாக வேறுபடவில்லை. 


அகர்வூட் பிசின்களில் சோதனை செய்யப்பட்ட GCMS ஆல் அடையாளம் காணப்பட்ட 19 கூறுகளில் இலவச கொழுப்பு அமிலங்கள் மற்றும் isopropyl naphthalene, 2-phenylethyl chromone  கலவைகள் பெரும்பாலான ஜி.வல்லா மரங்களுக்கு பொதுவானவை என்று கண்டறியப்பட்டது. 


ஜி. வால்லா பிசினில் இருந்து கண்டெடுக்கப்பட்ட sesquiterpene கலவைகள் Jinkhol, γ-eudesmol, valerenol  மற்றும் valerinal. Aquliaria spp யிலிருந்து பிசினிலும் இதே போன்ற கலவைகள் பதிவாகியுள்ளன. 


இது அகர்வூட்டின் மிகவும் நிறுவப்பட்ட மூலமாகும். எதிர்கால ஆய்வில் செயற்கை பிசின் தூண்டல் முறைகள் மற்றும் ஜி. வல்லாவின் தோட்டங்களை நிறுவுதல் ஆகியவை அதன் விநியோகத்தைத் தக்கவைக்கும்.


சட்டவிரோதமாக வல்லப்பட்டை மரங்களை அழிப்பதை விட  பொருளாதாரப்பயிர்களாக பயிர் செய்யலாம், நாட்டில் ஒரு புதிய தொழிலாக  வல்லப்பட்டை செய்கையை ஊக்குவிக்க முடியும்.


மேலதிக விபரங்களுடன் , மரக்கன்றுகள்  குறித்து Agri Lanka Plantation  அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் 

077 64 11 384

 


அனைவருக்கும் www,ceylon24.com மனமார்ந்த உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

1880களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அங்கே தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். 

இதனால் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சில இடங்களில் வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்றன. 8 மணி நேரம் தான் வேலை என்ற கோரிக்கை உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்படி 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் மிகப்பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனந்த் அம்பானி - ராதிகா: குஜராத் நிகழ்ச்சிக்கே 1200 கோடியாம்.. அப்போ லண்டன் திருமணத்திற்கு? ஆனால் காவல்துறையினர் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது வன்முறையில் முடிந்து சில தொழிலாளர்கள் இறக்க நேர்ந்தது. இந்த போராட்டத்தை நினைவு கூறவும், தொழிலாளர் உரிமைக்காக குறிப்பாக 8 மணி நேர வேலை என்ற உரிமையை ஒரு போதும் கைவிட்டு விட கூடாது என்பதற்காகவும் ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. 
 1889 ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில் 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890 ஆம் ஆண்டு மே 1 தேதி முதல் உலகளாவிய தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை 1923 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் முதன்முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது. அதுவும் தமிழகத்தில் தான் மே தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி சிங்கார வேலர்தான் முதன் முதலில் சென்னை மெரினா கடற்கரையில் மே தின பொதுக்கூட்டத்தை நடத்தினார். பணம் தான் கிங்.. ஏடிஎம் வித்டிராயல் அதிகரிப்பு..! வெளியான ரிப்போர்ட் சொல்வது என்ன? கடுமையான உழைப்பின் மூலம் தேசத்தை கட்டமைப்பதில் தொழிலாளர்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் உரிமைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கும் ,சுரண்டலில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை நிலைமைகளை வழங்க வேண்டும் என்பதை நினைவூட்டும் தினமாகவும் மே தினம் இருக்கிறது.பல நாடுகளில் தொழிலாளர் தினமானது தேசிய விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்களின் சாதனைகளையும் பங்களிப்புகளையும் முன்னிலைப்படுத்த பல நிகழ்வுகளும் ,கருத்தரங்குகளும் இந்த நாளில் நடத்தப்படுகின்றன. . தொழிலாளர் தினத்தின் வரலாறு, தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியவற்றை அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் தலையாய கடமையாகும்.

 


இலங்கையின் சனத்தொகை பெருக்கம் அபாயத்தில் உள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் எச்சரித்துள்ளது

 

 இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி காணப்படுகின்ற அதேவேளை வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது 280,000 ஆகக் குறைந்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.


 இதற்கிடையில், ஆண்டு இறப்புகளின் எண்ணிக்கை சுமார் 180,000 ஆக அதிகரித்துள்ளது, இது 2020 க்கு முன்பு 140,000 ஆக இருந்தது, அறிக்கைகளின்படி.


 இந்நிலைமை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியை பாதகமாக பாதிக்கும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


காலி முகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ITC Ratnadipa (ஐடிசி ரத்னதீப) ஹோட்டல் மற்றும் அதிசொகுசு வீட்டுத் தொகுதி இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

– ITC ரத்னதீப ஹோட்டல் திறப்பு விழாவில் ஜனாதிபதி

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்ததென தெரிவித்த ஜனாதிபதி, சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

 


அமெரிக்கா CEOWORLD சஞ்சிகையால், 2024 ஆம் ஆண்டில், உங்கள் வாழ்நாளில் சென்று பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகளில் #SriLanka 5வது இடத்தைப் பிடித்துள்ளது. 🇱🇰


 முதல் 10 நாடுகள்....

 


தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட 13 வருடங்களில், 99 ஆயிரத்து 375 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. 

 


மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (89) அமெரிக்காவில் காலமானார்.


உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952, 1956ல் ஒலிம்பிக்கில் ஈழத்தமிழர் சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

 


இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.

மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும்.

யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்?

இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.

 கடந்த ஏப்ரல் 14-15ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு மத்திய கிழக்கில் வசிப்பவர்களுக்கு ஒரு நீண்ட இரவாக அமைந்தது.


அன்றிரவு இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தியது. இது உலகின் கவனத்தையே அரபு நாடுகளின் வானத்தை நோக்கித் திருப்பியது.


சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரான் துணைத் தூதரகம் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுவான கருத்து நிலவுகிறது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் அரபு பிராந்தியத்தின் மீதுதான் உள்ளது. எனவே, இரானின் இந்தத் தாக்குதலை உலகம் முழுவதும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தது.


இந்தத் தாக்குதல்கள் அன்றிரவின் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தனது நட்பு நாடுகளின் உதவியுடன் தற்காத்துக் கொண்டது.


இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அதன் நவீன பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், சில இஸ்ரேலின் எல்லையை அடைவதற்கு முன்பே அமெரிக்கா உள்ளிட்ட பிற நட்பு நாடுகளின் உதவியுடன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


இரானின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை தற்காத்துக்கொள்ள உதவிய நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகியவை அடங்கும்.


அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்றுமே மேற்கத்திய நாடுகள். ஆனால் இரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடான ஜோர்டானும் சுட்டு வீழ்த்திய சம்பவம், பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் ஜோர்டானை விமர்சிக்கவும் செய்தனர்.


இரான் - இஸ்ரேல்: எந்த நாட்டின் ராணுவம் வலிமையானது? இரான் தாக்குதலின் பின்னணி என்ன? முழு விவரம்


பாகிஸ்தானில் சூடுபிடித்த விவாதம்

இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தானில், 'ஜோர்டான்' என்ற வார்த்தை ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் ட்ரெண்ட் ஆனது.


இதுகுறித்து, பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும், ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருமான முஷ்டாக் அகமது கான், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் படத்தைப் பகிர்ந்து எதிர்மறையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.


முஷ்டாக்கின் இந்தப் பதிவுக்கு 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்தனர்.


'ஆசாத் டிஜிட்டல்' சமூக வலைதளத்தில் அவர், "இஸ்ரேலின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க ஜோர்டான் மன்னருக்கு ஒருபோதும் மனம் வரவில்லை. ஆனால் இரான் இஸ்ரேலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கியபோது, அவர் உடனே இஸ்ரேலின் உதவிக்கு வந்தார். எனக்கு இது மிகவும் மோசமான நடவடிக்கையாகப் பட்டது,” என்றார்.


இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மட்டுமின்றி ஜோர்டானிலும் விமர்சிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை, அந்நாட்டின் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.


ஜோர்டானில் உள்ள ஐந்தில் ஒருவரின் மூதாதையர்கள் பாலத்தீனப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் மனைவி ராணி ரானியாவும் பாலத்தீனத்தைச் சேர்ந்தவர். காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து சமீபகாலமாக அவர் குரல் எழுப்பி வருகிறார்.


தூஸ்ஸாங் ல்யூவெர்த்யூர்: பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்து புரட்சி செய்த 'கருப்பு நெப்போலியன்'

14 ஏப்ரல் 2024

சிங்கப்பூரை விட பெரிய ராட்சத பனிப்பாறையின் நகர்வை 'அழிவின் பாதை' என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்?


படக்குறிப்பு,ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா

ஜோர்டான், இரான் நிலைப்பாடுகள் என்ன?

இந்த விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஜோர்டான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜோர்டான் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக’ கூறப்பட்டிருக்கிறது.


அந்த அறிக்கையின்படி, “சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஜோர்டானின் வான்வெளிக்குள் வந்தன. அவை எங்கள் மக்களுக்கும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றைத் தடுத்து நிறுத்தினோம். அவற்றின் சிதிலமடைந்த பாகங்கள் ஜோர்டானின் பல இடங்களில் விழுந்தன, ஆனால் அவை யாரையும் காயப்படுத்தவில்லை.”


மேலும், “ஜோர்டானையும், அதன் குடிமக்களையும், அதன் வான்வெளியையும் பாதுகாக்க எதிர்காலத்தில் எந்தவொரு நாடு நடத்தும் தாக்குதலையும் ஜோர்டான் தடுக்கும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, இஸ்ரேலுக்கு எதிரான தங்கள் தாக்குதலின் போது ஜோர்டான் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தாங்கள் கண்காணித்து வருவதாக தாக்குதலை நடத்திய இரானின் புரட்சிகர காவலர்கள் கூறியுள்ளனர்.


ஜோர்டான் தொடர்ந்து தலையிட்டால், அந்நாடு இரானின் அடுத்த இலக்காக இருக்கலாம். ஆனால் இரானின் உள்துறை அமைச்சர் நாசர் கனானி ஒரு செய்தியாளர் சந்திப்பில், "இந்தத் தாக்குதலை இடைநிறுத்தியதில் ஜோர்டானின் பங்கு பற்றி நான் பேச முடியாது, அது ராணுவ விவகாரம்," என்று கூறினார்.


“ஜோர்டானுடனான எங்கள் உறவுகள் நட்பு ரீதியானவை. கடந்த சில மாதங்களாக இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி சந்திப்புகள் நடந்தன,” என்றார்.


சமீபத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளமான 'டவர் 22' மீது இராக் போராளிக் குழுவான ‘அல்-மக்மூதா இஸ்லாமியா’வால் ட்ரோன்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.


ஜோர்டான் வரலாற்று ரீதியாக அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. 1990களில் இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா முன்னெடுத்த ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டபோது இஸ்ரேலுடனான அதன் உறவுகள் மேம்பட்டன.


பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்


ஜோர்டானின் வரலாறு

இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜோர்டானின் அம்மான் பகுதியில் விழுந்த இரானிய ஏவுகணையின் சிதைவுகள்

புவியியல் ரீதியாக, ஜோர்டான் மத்திய கிழக்கில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. சௌதி அரேபியா, இராக் மற்றும் சிரியாவை தவிர, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது ஜோர்டான். பாலத்தீனப் பகுதிகள் மற்றும் சிரியாவை சேர்ந்த ஏராளமானோர் ஜோர்டானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


ஜோர்டானில் முடியாட்சி உள்ளது. தற்போது இரண்டாம் அப்துல்லா ஜோர்டான் மன்னராக உள்ளார். 1946இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ஹாஷிமைட் வம்சம் (அல் ஹாஷிமூன்) ஜோர்டானை ஆட்சி செய்து வருகிறது.


மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹாஷ்மி குடும்பத்தின் வரலாறு மற்றும் வம்சாவளி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜோர்டான் மன்னரின் பரம்பரை இஸ்லாத்தைத் தோற்றுவித்த முகமது நபியின் வழித்தோன்றலாக வந்தது.


இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பு, இந்தப் பகுதி 400 ஆண்டுகளாக உஸ்மானியா சுல்தான்களால் (உஸ்மானிய பேரரசு) ஆளப்பட்டது. ஆனால் அதன் பின்னர் முதல் உலகப் போரின் போது நட்பு நாடுகளுக்கு எதிராகப் போராட முடிவு செய்தது. இந்த முடிவின் மூலம், மெக்காவின் அப்போதைய அமீர் (உள்ளூர் ஆட்சியாளர்) ஷெரீப் ஹுசைன் பின் அலி, ஒட்டோமான் சுல்தானகத்திடம் இருந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பைப் பெற்றார்.


பிரிட்டன் உட்பட மற்ற கூட்டணி சக்திகளின் உதவியுடன், 1916இல் அரபு கிளர்ச்சிக்குப் பிறகு மெக்கா ஒட்டோமான் சுல்தானகத்தில் இருந்து சுதந்திரம் பெற்றது.


கடந்த 1917இல், ஆங்கிலோ-அரபு ராணுவம் பாலத்தீனத்தை உள்ளடக்கிய பகுதியைக் கைப்பற்றியது. 1921ஆம் ஆண்டில், பாலத்தீனம் அந்தப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு 'டிரான்ஸ் ஜோர்டான்' பகுதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஆட்சி அப்துல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஜோர்டானின் முதல் மன்னரானார்.


மெக்காவின் எமிர் ஷெரீப் ஹுசைன் பின் அலியை சர்ச்சைக்குரிய பால்ஃபோர் பிரகடனத்தில் கையொப்பமிட வைக்க பிரிட்டன் பலமுறை முயன்றது. அதற்குப் பதிலாகப் பெரிய தொகையைக் கொடுக்கவும் முயன்றது. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் பின்னர் கூட்டணி நாடுகள் சார்பில் சௌதி குடும்பத்தினருடன் ஒப்பந்தம் ஏற்பட்டது.


பிராமண எதிர்ப்பு இயக்கம், பாலியல் கல்வி வழக்குகளில் அம்பேத்கர் முன்வைத்த வாதங்கள் என்ன தெரியுமா?


இஸ்ரேல்-ஜோர்டான் உறவுகள்இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,

படக்குறிப்பு,ஜோர்டான் கொடி

பால்ஃபோர் பிரகடனம், யூதர்களுக்காகத் தனி நாட்டை நிறுவ பிரிட்டன் கொண்டு வந்த ஒரு சர்ச்சைக்குரிய திட்டம். 1946 வரை, அந்தப் பகுதி பிரிட்டனின் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து ஆளப்பட்டது. ஆனால் 1946இல் அது ஜோர்டானின் ஹாஷிமைட் அரசு என்ற பெயரில் ஒரு சுதந்திர நாடாக மாறியது.


கடந்த 1948 மற்றும் 1973க்கு இடையில், ஜோர்டான் இஸ்ரேலுடன் நான்கு போர்களை நடத்தியது. 1948இல் நடந்த முதல் அரபு-இஸ்ரேல் போர், 1967இல் நடந்த போர், 1967 முதல் 1970 வரை நடந்த போர், 1973இல் நடந்த போர் ஆகியவை இதில் அடங்கும்.


அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 1994ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கவில்லை.


ஜோர்டானின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, ஜோர்டானின் கொடியின் கதையும் மிகவும் சுவாரஸ்யமானது. இந்தக் கொடி ஒட்டோமான் சுல்தானகத்திற்கு எதிரான அரபு கிளர்ச்சியின் கொடியால் உந்தப்பட்டது.


இது மூன்று வெவ்வேறு வண்ணப் பட்டைகள் மற்றும் ஒரு சிவப்பு முக்கோணத்தைக் கொண்டுள்ளது. இந்தக் கொடியில் ஏழு புள்ளிகள் கொண்ட நட்சத்திரமும் உள்ளது.


இந்த நட்சத்திரத்தின் ஒவ்வொரு விளிம்பும் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் முதல் சூராவான 'அல்-ஃபாத்திஹா'வின் ஏழு வசனங்களைக் குறிக்கிறது. இந்தக் கொடியை பாலத்தீனக் கொடியில் இருந்து வேறுபடுத்துவது இந்த நட்சத்திரம்தா

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.