ஆணையாளருக்கு ஆதரவாக



அக்கரைப்பற்று மாநகரசபையின் ஆணையாளரை அவமதித்து, வீண்பழி சுமத்தும் செயற்பாட்டைக் கண்டித்து, மாநகரசபையின் ஊழியர்கள், உத்தியோகத்தர்களால் அடையாள வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டப் பேரணியும் இன்று (18) நடத்தப்பட்டது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் அக்கரைப்பற்றில் கடந்த 15ஆம் திகதி நடத்தப்பட்ட அபிவிருத்தி நிகழ்வில் அடிக்கல் நாட்டுவதற்கான ஒழுங்குகளை ஆணையாளர் மேற்கொள்ளவில்லை என்று ஒரு குழுவினர், ஆணையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியமைக்கும் அச்சுறுத்தல் விடுத்தமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தே, இவை நடத்தப்பட்டன.
“அரசியல்வாதிகளின் கையாட்களின் இவ்வாறான மோசமான அவமதிப்புச் செயற்பாடு, சமூகவலைத்தளங்களில பரப்பப்பட்டதால்  உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அரச கடமையில் ஈடுபடுவதில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்” என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.