கற்பிட்டியில், கண்டல் தாவரங்கள் நடுகை




ஓசோன் படையைப் பாதுகாத்தல் சம்பந்தமான மொன்ட்ரியல் நடப்பொழுங்கின் 30ஆவது ஆண்டுகள் நிறைவையும் சர்வதேச ஓசோன் தினம் 2017ஐயும் முன்னிட்டு, கண்டக்குளிய சதுப்பு நிலத்தில், 2,000 கண்டல் தாவரங்கள், இன்று (18) நாட்டி வைக்கப்பட்டன.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர் ஆளுநர் அநுராதா ஜயரத்ன, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கற்பிட்டி கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து 850 மாணவர்கள், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி, வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.என்.தாஹிர், புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, புத்தளம் வலய (தமிழ்)உதவிக் கல்விப் பணிப்பாளர் சற்.ஏ.சன்ஹிர் உட்படப் பலர், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.