கம்பஹாவின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர்வெட்டு




கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளையதினம் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது. 

அத்தியவசிய திருத்தப் பணி காரணமாக நாளை (15) காலை 08.00 மணி முதல் நள்ளிரவு வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

அதன்படி களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளது.