நூருல் ஹுதா உமர் 2026 ஆம் ஆண்டிற்கான கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகளில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டிகளில் பாடசாலை மாணவர்கள் மொத்தமாக 05 முதலாம் இடங்கள், 01 இரண்டாம் இடம், 02 மூன்றாம் இடங்கள் எனப் பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வெற்றிகளுக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து வழிநடத்திய தமிழ் துறை ஆசிரியர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதிம் அவர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்கள் பாடசாலை சார்பாக தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸ் அமைப்பு (INTERPOL) நடத்தும் முதலாவது பொதுத் தொடர்பு தொடர்பான உலக மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு பெற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், சட்டமாணி ஃபிரெட்ரிக் வுட்லர், பங்கேற்க 2026.04.26 அன்று காலை பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார்.
அங்கு அவர், சமீப காலத்தில் நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளி நிலைமைகளின் போது இலங்கை பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விசேட உரை ஒன்றை வழங்க உள்ளார்.
இவ்வாறு சர்வதேச பொலிஸ் மாநாட்டில் விசேட உரையை வழங்க அழைப்பு பெற்ற முதல் பொலிஸ் அதிகாரியாக இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி ஃபிரெட்ரிக் வுட்லர் ஆவார்.
இம் மாநாடு 2026 ஏப்ரல் 28 முதல் 30 வரை பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற உள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (24) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை தற்போது ஒன்லைன் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் இதற்கான இணையத்தளம் செயலிழக்கப்படும் என்பதால், அதன் பின்னர் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதி எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 84 சதவிகிதத்தைக் கடந்ததாக தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் நிலை (5 மணி நிலவரப்படி)
முதலமைச்சர் ஸ்டாலின் - கொளத்தூர் தொகுதி - 83.58%
தவெக தலைவர் விஜய் - பெரம்பூர் - 86.72%, திருச்சி கிழக்கு - 79.32%
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி தொகுதி - 89.09%
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - காரைக்குடி தொகுதி - 71.88%
விளம்பரம்
முன்னிலை வகிக்கும் தொகுதிகள்:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு,சென்னையில் வாக்கு செலுத்திய வாக்காளர் ஒருவர்
தொகுதிவாரியாக பார்க்கையில் அதிகபட்சமாக குமாரபாளையம் தொகுதியில் 90.98% வாக்குகள் பதிவாகியிருந்தன. (5 மணி நிலவரப்படி)
வீரபாண்டி - 90.76%
சங்ககிரி - 90.30%
பாலக்கோடு - 89.96%
குளித்தலை - 89.83%
கிருஷ்ணராயபுரம் - 89.83
பெருந்துறை - 89.82%
காங்கேயம் - 89.46%
எடப்பாடி - 89.09%
வேடச்சந்தூர் - 88.86%
ஒட்டன்சத்திரம் - 88.63%
மொடக்குறிச்சி - 88.60%
கரூர் - 88.58%
அவிநாசி - 88.51%
பல்லடம் - 88.42%
திருப்பூர் தெற்கு - 88.23%
திருச்செங்கோடு - 88.06%
ஏற்காடு - 88.02%
குறைவாக வாக்கு சதவிகிதம் பதிவான தொகுதிகள் (5 மணி நிலவரப்படி)
காரைக்குடி - 71.88%
குளச்சல் - 71.87%
மதுரை மத்திய - 71.39%
மதுரை வடக்கு - 70.26%
கிள்ளியூர் - 69.13%
பாளையங்கோட்டை - 66.71%
தமிழ்நாட்டில் மதியம் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்ட வாரியாக பார்க்கையில் நாமக்கலில் 76.43 சதவிகிதமும் அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 75.79 சதவிகிதம் மற்றும் திருப்பூரில் 75.38 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
தொகுதி வாரியாக குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 80.67% வாக்குகளும் அதற்கு அடுத்தபடியாக சங்கரி தொகுதியில் 78.42 வாக்குகளும், வீரபாண்டியில் 78.05% வாக்குகளும், காங்கேயத்தில் 78.31% வாக்குகளும் பவானியில் 77.64% வாக்குகளும் அவிநாசியில் 77.43% வாக்குகளும் பதிவாகியிருந்தன.
திருவண்ணாமலை அருகே ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் முகவர் சேதப்படுத்தியதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி தர்ப்பகராஜ், தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நிகழ்விடத்தை பார்வையிட்டனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவரது இரு முகவர்களை போலீசார் கைது செய்தனர்.
பு
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் தேனாம்பேட்டையில் வாக்களித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். நடிகர் அஜீத், சென்னையின் திருவான்மியூரில் 7 மணிக்கு முன்னதாகவே தனது வாக்கைச் செலுத்திவிட்டுச் சென்றார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார்.
காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையின் நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
'தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென' பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று காலை பதிவிட்டுள்ளார்.
காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வந்தவர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதேபோன்று, https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்.
தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோவையில் அமைக்கப்பட்ட தனித்துவமான வாக்குச் சாவடிகள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம்நகர் வாக்குச் சாவடியில் தனித்துவமான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது.
பெண்கள் மட்டும் பணிபுரியும் பிங்க் வாக்குச் சாவடி, இளைஞர் வாக்குச் சாவடி, பசுமை வாக்குச் சாவடி மற்றும் மாதிரி வாக்குச் சாவடி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களின் குழந்தைகள் விளையாட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இந்த 4 விதமான வாக்குச் சாவடிகளும் ஓரே இடத்தில் அமைக்கப்பட்டிருந்தன. வாக்களிப்பவர்கள் வாக்குச் சாவடி வாயிலில் இருந்து செல்பி எடுத்துக்கொள்ள பிங்க் வாக்கு சாவடியில் செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பசுமை வாக்கு சாவடியில், வாக்காளர்களை கவரும் விதமாக தென்னை ஓலையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் வாக்களிக்க வருபவர்களின் குழந்தைகள் விளையாட தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டு, குழந்தைகள் படம் வரையவும், விளையாடவும் உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தது.
வாணியம்பாடியில் தவெக- திமுக இடையே மோதல
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் இடையேயான மோதல் காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
'கள்ள ஓட்டு போடப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் தலைமையிலான நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, 'கள்ள ஓட்டு போட்டவர் யார் என்பது சிசிடிவி பதிவு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.
ராமநாதபுரம்: வாக்காளர்களின் செல்போன்களை சேகரித்த அதிகாரிகள்
ராமநாதபுரம் நகர் பகுதியில் வாக்களிப்பதற்கு முன்பாக வாக்காளர்களிடம் செல்போன்களை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர் திரும்ப வழங்கப்பட்டது.
தேர்தலில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் மையத்துக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று வாக்குப் பதிவு செய்வதை வீடியோவாக பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் அலுவலர்கள் தன்னார்வலர்களைப் பணியில் அமர்த்தி வாக்கு மையத்துக்கு செல்வதற்கு முன்பு வாக்காளர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்துவிட்டு வாக்கு செலுத்த அனுமதித்தனர்.
வாக்கு செலுத்திய பின்னர் அவர்களுடைய செல்போன் நம்பரை கூற சொல்லி, அதனைச் சரிபார்த்து செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
'கடைசி வாய்ப்பு'
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் இன்பன் உதயநிதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் மனைவி துர்கா, மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன் இன்பன் உதயநிதியுடன் வந்து, சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், சமத்துவம், சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் மக்களின் வாக்குகள் அமைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். அவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு,நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சிதம்பரம் வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் ஒரு நிலையான அரசு, வளர்ச்சி, நலத்திட்டங்கள் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணியே ஆட்சியை தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அமையும் புதிய அரசு பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அமைச்சர்கள், அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள். தமிழகத்துக்கு தேவையான கடனை வாங்கி பட்ஜெட் போடுவார்கள். வருவாய் இருந்தால் கடன் வாங்கலாம், தவறில்லை" என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மனைவி கயல்விழியுடன் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கினை பதிவு செய்தார். சீமான், இந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "ஒற்றை விரலால் பெரும் மாறுதலை ஏற்படுத்த முடியும். வாக்களிப்பது, நம்மிடம் இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை. தலைமையை தேர்ந்தெடுக்க நம்மிடம் இருக்கும் கடைசி வாய்ப்பு. மக்கள் அதை தவறவிடக் கூடாது." என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வாக்களித்தார்.
அரசியல் கட்சிகளின் நிலவரம்
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிடுவதுடன், விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. அதுதவிர ராமதாஸ்-சசிகலா கூட்டணியும் களத்தில் உள்ளது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன
திமுக 166 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்குத் தலா இரண்டு தொகுதிகள், மனிதநேய எஸ்டிபிஐ மற்றும் தமிழர் தேசம் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி என திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8, தேமுதிகவுக்கு 10, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்களும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 இடங்களும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 5 இடங்களில் போட்டியிடுகின்றது. ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஒரு தொகுதி), புதிய நீதிக் கட்சி (ஒரு தொகுதி), புரட்சி பாரதம் (ஒரு தொகுதி) உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் போட்டியிடுகின்றன.
புதிதாகக் களமிறங்கி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. எடப்பாடி தொகுதியில் அக்கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தற்போது அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமாருக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியில் ஆண்கள் 117 பேரும், பெண்கள் 116 பேரும், திருநங்கை ஒருவரும் போட்டியிடுகின்றனர்.
சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், ராமதாஸ் மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையிலான பிரதான எல்லைக் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கின் வர்த்தக மற்றும் எரிசக்தி போக்குவரத்தில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் தொடர்பான போர் பதற்றங்களால் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள ஹோர்முஸ் நீரினைக்கு மாற்றாக இந்த நிலவழிப் பாதையைப் பயன்படுத்த முடியும் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. கடல்வழிப் போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது, இந்த எல்லைப் பாதை ஒரு பாதுகாப்பான மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், நிலவழியாக எண்ணெயைக் கொண்டு செல்வது என்பது கடல்வழி மற்றும் குழாய் வழி மூலமான போக்குவரத்தை விட மிகக் குறைந்த செயல்திறன் கொண்டது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் எண்ணெயின் அளவோடு ஒப்பிடுகையில், நிலவழிப் போக்குவரத்து செலவு மற்றும் நேரம் அதிகமாக எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்றிய ஈராக்கின் நினிவே மாகாண சபை உறுப்பினர் நாதியா அல்-ஜுபோரி கூறியதாவது:
"இந்த எல்லைப் பாதையின் திறப்பு, வர்த்தகப் பரிமாற்றம் மற்றும் எண்ணெய் போக்குவரத்திற்கான ஒரு பிரம்மாண்டமான கதவைத் திறந்துவிட்டுள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் வலுசேர்க்கும்." என் தெரிவித்தார்
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த எல்லைப் பகுதி மூடப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயலின் கட்டுமாணப் பணிகள் இன்று 2026.04.20ந் திகதியன்று லுஹர் தொழுகையின் பின்னர் துவங்கப்பட்டன.
அக்கரைப்பற்று பட்டின ஜீம்ஆ பள்ளிவாயலின் தலைவர் ஹாருன் சேர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பட்டின ஜும்ஆ ப பள்ளிவாயலின் 24 குடிகளின் நம்பிக்கையாளர்கள், மரைக்காயர்மார்கள், அக்கரைப்பற்று பிரேதச உதவிச் செயலாளர், அக்கரைப்பற்று ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதிநிதகள், பரோபகாரிகள், நலன் விரும்பிகள், ஜமாத்தார்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்
இப் பள்ளிவாயலின் கட்டுமாணப் பணிகளுக்கான அடிக்கல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றது இங்கு நினைவு கூரத்தக்கது
ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், புதிய பொதுச் சந்தை கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (17) ஏறாவூரில் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.
ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ். நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மேலும், கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். அப்துல் வாசித் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய பொதுச் சந்தை வளாகம், ஏறாவூர் பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கியமான கட்டமைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் அரசியல், சமூக மற்றும் மதத் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் 14வது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் முன்னிலையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இதனை சிறப்பிக்கும் முகமாக, கல்லூரி பயிலுனர்களுக்கிடையே Presentation, Quiz போன்ற அறிவு மற்றும் மென் திறன் போட்டிகளும், Chess மற்றும் Carrom போன்ற உள்ளரங்க திறன் விளையாட்டுகளும் இடம்பெற்றன.
இதில் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகள் உட்பட கரடியனாறு மற்றும் காரைதீவு சமுதாயக் கல்லூரிகளிலும் பயிலும் 130-க்கும் மேற்பட்ட பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.
Presentation, Quiz, Chess, Carrom போன்ற நான்கு கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டிகளில், பயிலுனர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இதன் மூலம், கல்லூரி பயிலுனர்கள் மத்தியில் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிப்படுத்தும் முக்கியமான சேவையை நிகழ்த்தி வருகிறது.
இறுதியாக, போட்டிகளில் கலந்து கொண்ட பயிலுனர்களுடன் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் மற்றும் நடுவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், போட்டியாளர்கள் தமது திறமைகளை மேலும் மேம்படுத்திக்கொள்ள ஆக்கபூர்வமான கருத்துகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக, கல்முனை ஆதார வைத்தியசாலையின் கணக்காளராக கடமையாற்றிய எம்.கேந்திரமூர்த்தி, நேற்று (7) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் .
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர், பிரதேச செயலகத்தின்உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்த்,சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.அரசரெத்தினம், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாம் தினமும் QR Code ஸ்கேன் செய்கிறோம். கறுப்பு , வெள்ளை கலந்த அந்தப் படம் எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா?
ஸ்கேனர் எப்போதும் கறுப்பு வரிகளைப் படிக்காது, அவற்றுக்கு இடையே உள்ள வெள்ளை இடைவெளியைத்தான் படிக்கிறது. Barcode, QR Code கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களுக்கு இடையிலான வேறுபாட்டை (Contrast) அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன. வெள்ளை நிறம் ஒளியைப் பிரதிபலிக்கும், கருப்பு நிறம் ஒளியை ஈர்க்கும் என்ற அறிவியல்தான் இங்கும் பயன்படுகின்றது
எனவே, ஸ்கேனர் வெளியிடும் ஒளியானது கறுப்பு வரிகளில் பட்டு ஈர்க்கப்படுகிறது, ஆனால் வெள்ளை இடைவெளிகளில் பட்டு மீண்டும் ஸ்கேனரில் உள்ள சென்சாருக்குத் திரும்புகிறது. இந்த ஒளித் திருப்பம் (Reflected light) தான் 0 மற்றும் 1 என்ற பைனரி எண்களாக மாற்றப்பட்டு புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே, ஸ்கேனர் அந்த வெள்ளை இடைவெளிகள் உருவாக்கும் ஒளி அமைப்பைத்தான் (Pattern) வாசிக்கிறது.
இதன் பின்னணி மிகவும் சுவாரசியமானது. 1948-ம் ஆண்டு நார்மன் ஜோசப் உட்லேண்ட் (Norman Joseph Woodland) என்பவர், தனது நண்பர் பெர்னார்ட் சில்வருடன் இணைந்து பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை எளிதாக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்க நினைத்தார்.
ஒருநாள் மியாமி கடற்கரையில் அமர்ந்திருந்த உட்லேண்ட், சிறு வயதில் தான் கற்ற Morse code (தகவல்களைப் பரிமாறும் புள்ளிகள் மற்றும் கோடுகள்) பற்றி யோசித்தார். அப்போது தனது நான்கு விரல்களை மணலில் இழுத்தபோது ஏற்பட்ட வரிகளைப் பார்த்து அவருக்கு உதித்த யோசனைதான் இந்த பார் கோட்! 1952-ல் இதற்கு அவர்கள் காப்புரிமை பெற்றனர்.
உலகிலேயே முதன்முதலாக 1974-ஆம் ஆண்டு ஓகியோவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், Wrigley's chewing gum பாக்கெட்டில்தான் பார் கோட் அதிகாரபூர்வமாக ஸ்கேன் செய்யப்பட்டது.
பார் கோடின் அடுத்தகட்ட தொழில்நுட்பப் பரிணாமமே நாம் இன்று சாதாரணமாகப் பயன்படுத்தும் QR Code
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மயக்கமருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ஏழாவது சந்தேக நபரான வத்தளை பார்மசி உரிமையாளரை, பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விசாரணை செய்வதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலிருந்து சென்ற கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொழும்பு,வத்தளை பகுதியில் வைத்து மயக்கமருந்துகளை விநியோகம்செய்த நபரை கைதுசெய்திருந்தமை தெரிந்ததே.
விசாரணையின் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினியின் அறையில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஏழாவது சந்தேக நபருடன் முதலாவது சந்தேக நபரும் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர்கள் மூடிய நிலையில் நீதிமன்றுக்குள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
இதன்போது கொக்கட்டிச்சோலை பொலிஸார் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக ஏழாவது சந்தேக நபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதியளித்தார்.
நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேசத்தில் வாழும் மீனவர்கள், மீன் வியாபாரிகள் மற்றும் மீனவ சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நேரில் ஆய்வு செய்யும் நோக்கில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் இன்று (29) கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த விஜயம் நிந்தவூர் கடற்கரைப் பகுதிகளில் இடம்பெற்றதுடன், அங்குள்ள கரைவலை மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், கடல் அரிப்பினால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் மற்றும் மீன் வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரடி கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எச். அம்ஜத் அலி மற்றும் மெளலவி கே.எம். ஜலீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு கடந்த 28.02.2026 அன்று நெல்லிக்காட்டு கிணற்றில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.
மட்டக்களப்பு திக்கோடை வம்மியடியூற்று 40 ஆம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய திருமதி நளாயினி ரவி என்பவரே படுகொலையுண்டவராவார்.
அவரையிழந்து நிர்க்கதியாக தவிக்கும் குடும்பத்திற்கு பொதுமக்களின் நிதி உதவி தேவைப்படுகின்றது.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், அவரது கணவர் செல்லத்துரை ரவி (வயது 48) கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். குடும்பத்தின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறார் .
கடந்த சுமார் 40 ஆண்டுகளாக வறுமையில் வாழ்ந்து வந்த இவர், தற்போது கடுமையான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இத்தம்பதியருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.
அவரது மகன் ரவி முகுந்தனுடன் 074 1577381 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விடயத்தை அறியலாம்.
எனவே, கருணையுள்ள பொதுமக்கள் இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உதவ விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கி கணக்கின் மூலம் தங்களது நன்கொடைகளை வழங்கலாம்.
வங்கி விவரங்கள்:
A/C Name: Miss. Ravi Denusiya
A/C No: 92549457
Bank: Bank of Ceylon
Branch: Palugamam
Swift Code: BCEYLKLXXXX
மேலும் தகவல்களுக்கு:
WhatsApp: +94 74 157 7381
இந்த நெருக்கடியான நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய பொதுமக்கள் அனைவரிடமும் அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வாகனப் பதிவின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவரைக் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
காரைதீவு விளையாட்டு கழகத்தின் 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட
கயிறிழுத்தல் போட்டியில் "நல்லமா" அணி வெற்றிவாகை சூடியது.
காரைதீவு காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற , பலரையும் கவர்ந்த இப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு விளையாட்டு கழகத்தின் முன்னாள் வீரரும், ஒஸ்கார் அமைப்பின் செயலாளருமான திருச்செல்வம் லாவண்யன் கலந்து சிறப்பித்தார். அவர் முன்னிலையில், விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்ஷன் ஆரம்பிப்பாளராக இருந்து நடாத்தி வைத்தார். ஆனந்தன் அமிர்தானந்தன் களத்தில் இருந்து நேர்முக வர்ணனை செய்தார்.
கௌரவ அதிதிகளாக கழகப் போசகர்களான
உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் , ஓய்வு நிலை உதவிக் கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மூன்று அணிகள் போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற "நல்லமா" அணியினருக்கும் ஏனையோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.