வரட்சியினால், மாடுகள் உயிர் இழந்தது




( அப்துல்சலாம் யாசீம்,) 

திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றிப் போய் உள்ளதால் மாடுகள் நீரின்றி அவதியுற்று வருவதாகவும் சில மாடுகள்  உயிர் இழந்து வருவதாகவும்  மாட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ. தம்பலகாமம்,கிண்ணியா, மற்றும் மூதூர் பகுதிகளில் அதிகளவான மக்கள் கால்நடைகளை நம்பியே தங்களது ஜீவனோபாயங்களை நடத்தி வருகின்றனர்.

அதிகளவான குளங்கள் நீரின்றி வற்றி போயுள்ளதாகவும் இதனால் மாடுகளை மேய்ப்பதற்கு இடம் இல்லாத நிலையில் 20 மற்றும் 25 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கு மாடுகளை கொண்டு சென்று தண்ணீரை வழங்கி மாடுகளை மேய்த்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

மாடுகளை நம்பி  வாழ்ந்து வரும் இக்காலகட்டத்தில் மாடுகளுக்கு குடிப்பதற்கு நீர் இன்மையானால் மாட்டில் இருந்து பெறப்படுகின்ற  பசும்பாலை கூட பெற முடியாத நிலையில் இருப்பதாகவும், மாட்டு உரிமையாளர்கள் தங்களுக்கு அரசினால் ஏதாவது திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

இதேவேளை அதிக வெப்பம் காரணமாக மாடுகளுக்கு புதிய நோய்கள் ஏற்படுவதாகவும் அதனால் மாடுகள் உயிரிழந்து வருவதாகவும் மாட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

எனவே நல்லாட்சி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற திட்டங்களை போன்று மாடுகளை நம்பி வாழ்கின்ற மாட்டு உரிமையாளர்களுக்கும் புதிய திட்டங்களை கொண்டு வந்து  மாடு உரிமையாளர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.