’ பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’


இன்றிலிருந்து எதிர்வரும் 22ஆம் திகதி வரையிலும் ம​ழையுடனான வானிலை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் அதிக மழை பெய்யக்கூடுமென்றும், அத்தோடு இன்று மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.