உலக ஆணழகர் லூசியன் புஷ்பராஜுக்கு அன்பளிப்பு


உலக ஆணழகர் லூசியன் புஷ்பராஜுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச தனது சொந்த நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட சஜித் பிரேமதாஸா, தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டபோதே இந்த அன்பளிப்பை வழங்கி வைத்தார்.
தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் அண்மையில், இடம்பெற்ற உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உலக சம்பியன்ஷிப்பில், 100 கிலோகிராம் எடைக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் வெற்றிபெற்ற லூசியன் புஷ்பராஜ் உலக கட்டழகராக தெரிவாகி வெற்றிபெற்று உலக சம்பியனானார்.