கொழும்பில், நீர்வெட்டு




கொழும்பு மாவட்டத்துக்குட்பட்ட சில பிரதேசங்களுக்கு, இன்று நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என, தேசிய நீர்வழங்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், இன்று நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் நாளை பிற்பகல் மாலை  6.00 மணிவரை, இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்பிடி, மொரகொஸ்முல்ல, இராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல-கொஸ்வத்த மற்றும் இராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த உள்வீதிகள் ஆகிய பிரதேசங்களில் இந்நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகள் காரணமாகவே, இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.