"நஞ்சுண்ட நிலவு"


பாறுக் ஷிஹான்  

இலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய "நஞ்சுண்ட நிலவு" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா 31.03.2019, ஞாயிற்றுக்கிழமை(31) காலை 8.30 மணியளவில் அல்-ஹாஜ் கலாபூஷணம் எஸ். அஹமது (JP) அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் அல்-ஹாஜ்  ரிசாட் பதியுதீன்  கலந்துகொண்டதோடு, கௌரவ அதிதிகளாக, இராஜாங்க அமைச்சர் M.S.S. அமீர் அலி, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் (NEDA)   கலாநிதி. சிராஸ் மீராசாஹிப்,அல்-ஹாஜ்  பஷீர் சேகுதாவுத்,   எஸ்.எம்.எம். கலாநிதி. இஸ்மாயில்(பா.உ.)
அவர்களோடு இலக்கிய கலைஞர்கள், ஊர் பிரமுவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.