முஸ்லிம் இனத்தவர்களை தீவிரவாதிகளாக பார்க்க கூடாது



ஒட்டு மொத்த முஸ்லிம் இனத்தவர்களையும் தீவிரவாதிகளாக நாம் பார்க்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஊடகங்களின் பிரதானிகளுடன் நடைபெறும் விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

(பின்னிணைப்பு - 9.59 am) 

பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தமது பொறுப்புகளை உரிய முறையில் செய்யவில்லை எனவும் அதனால் அவர்களை இராஜினாமா செய்யுமாறு தான் பணித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மேலும், பொலிஸ் மா அதிபர் தனது பதவியை இன்று இராஜினாமா செய்வார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். 

இந்நிலையில் நேற்று பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

(பின்னிணைப்பு - 10.20 am) 

நாட்டில் இடம்பெற்ற தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் புலனாய்வு பிரிவில் உள்ள குறைபாடுகளும் இதற்கு காரணம் என ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.