குளியாபிட்டிய பகுதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு


குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீண்டும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் மீண்டும் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்தே மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நேற்று இரவு முதல் குறித்த பகுதியில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை நீக்கப்பட்டிருந்த வேளையில் தற்போது மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது