இலங்கை விஜயம் இரத்து


இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தை இரத்து செய்துள்ளார். 

பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர் மெஹமூத் குரேசி நாளை (03) இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் தற்போதை நிலமையினை கருத்திற் கொண்டு அவர் தனது விஜயத்தை இரத்து செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது.