சிறை மீண்ட செம்மல் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன்


#IsmailUvaizurRahman.
சட்ட விரோத கருக்கலைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதி உதவியமை, அளவுக்கதிகமான சொத்துக் குவிப்பு என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்து குருனாகல மருத்துவ நிபுணர் Drஷாபி ஷிஹாப்தீனிற்கு பிணை வழங்குவதாக குருனாகல நீதிமன்று சற்று முன் கட்டளையிட்டது.

குற்றம் சாட்டப்பட்ட வைத்தியரை 250,000 ரூபாய் ரொக்க பிணையிலும் 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப்பினையிலும் நீதிமன்றம் விடுவித்தது #lka 

#SriLanka #Kurunegala

குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

அசாதாரண முறையில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மக்கள் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவார்கள் என்பதினால் வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித முதலிகே நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.