ஊடகவியலாளர்களுக்கான சிங்கள மொழி கற்கை நெறி


பாறுக் ஷிஹான்

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் இசமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார  அமைச்சர் மனோ கணேஷனின்  வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கான இலவச சிங்கள மொழி கற்கை நெறி நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை ( 08.09.2019) தொடக்கம் 19.09.2019ம் திகதி வரை தொடர்ச்சியாக 12  நாட்கள் இடம்பெறவுள்ளது.

சிலோன் மீடியா  போரத்தின் கோரிக்கைக்கு  அமைய  இக்கற்கை நெறியினை அம்பாறை மாவட்ட ஊடகவிலாளர்களுக்கு  வழங்குவதற்கு இ அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாரும் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் கே.எம்.ரிஸ்கான் முகம்மட்  முன்னெடுத்திருந்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  வி.ஜெகதீஸன் அம்பாறை மாவட்ட  கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியலாளர் ஏ எம் சகீர்  சிலோன் மீடியா  போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீத் அம்பாறை   மாவட்ட தமிழர்  ஊடக மையத்தின் தலைவர்  ரீ.தர்மேந்திரா  சிலோன் மீடியா  போரத்தின் செயலாளர் எ.எஸ்.எம் முஜாஹீத்  நுஜா ஊடக ஒன்றிய செயலாளர் பைசல் இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.