மருதமுனை இளைஞன் நாவலடியில் தீ வைக்கப்பட்டுக் கொலை


மருதமுனை இளைஞர் ஒருவர் ஓட்டமாவடி நாவலடியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

27 வயது மதிக்கத்தக்க மின்ஹாஜ் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் ஆவார்.

குடிபோதையில் வந்த இருவர், இவ் இளைஞரும் தாயும் வசித்து வந்த வீட்டுக்கு தீ வைததுள்ளனர். தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமானார்.