உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78, 601-ஆக உயந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
அதேவேளையில் இதுவரை 16,505 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் 6,077 பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்று நோயின் தொடக்கமான சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 1 மடங்கு அதிகம்.
கொரோனா தொற்று பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகள்
- இத்தாலி: 6,077
- ஹுபே மாகாணம் சீனா: 3,153
- ஸ்பெயின்: 2,311
- இரான்: 1,812
- பிரான்ஸ்: 860
- அமெரிக்கா: 515
- பிரிட்டன்: 335
- நெதர்லாந்து: 213
- ஜெர்மனி: 123
- ஸ்விட்சர்லாந்து: 120
தீவிரமடைகிறது கொரோனா வைரஸ்: எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்
GETTY IMAGES
கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து நாடுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கோவிட்-19 கண்டறியப்பட்டு 67 நாட்களில் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது. அதன் பிறகு 11 நாட்களில் 2 லட்சத்தை கடந்தது. இப்போது நான்கு நாட்களில் 3 லட்சத்தை கடந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்த நிலையை மாற்றும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.
மீண்டும் திறக்கப்பட்ட சீன வனவிலங்கு பூங்கா
கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கியுள்ள நிலையில், சீனாவில் பெய்ஜிங் நகரத்தில் உள்ள வனவிலங்கு பூங்கா ஒன்று 58 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இது பற்றி செய்தி வெளியிட்டிருந்த உள்ளூர் ஊடகமொன்று கொரோனா வைரஸ் தொற்றால் நீண்ட காலமாக இந்த வனவிலங்கு பூங்கா மூடப்பட்டிருந்த நிலையிலும், இங்குள்ள விலங்குகள் நல்ல உடல்நிலையுடன் ஆரோக்யமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
'இந்தியாவில் பரவுவதை வைத்தே கொரோனாவின் தீவிரத்தை அறிய முடியும் '
GETTY IMAGES
இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை வைத்தே அதன் தீவிரத்தை அறிய முடியும். இதனால் இந்தியா மக்கள் சுகாதாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிய அம்மை மற்றும் போலியோ போன்ற உலகை அழித்து கொண்டிருந்த நோய்களை ஒழிக்க உலகத்திற்கு இந்தியாதான் வழிகாட்டியது. இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இதை ஒழிக்க வழி அறியும் திறன் இருக்கிறது என உலக சுகாதர நிறுவன செயல் இயக்குனர் டாக்டர். மைக்கேல் ஜெ ரியான் கூறியுள்ளார்.


Post a Comment
Post a Comment