முஸ்லிம்களுக்காக மீண்டும் கர்சித்த சிங்கம் கஜேந்திரகுமாரர்.



நிபுணர்களின் அறிக்கையின் பிரகாரம் ஜனஸாக்கள் எரிக்கப்படும் என்ற கருத்தில் மாற்றம் இல்லை என இன்று சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார்.


இதனை அடுத்து பா.உ கஜேந்திர குமார் அவர்கள் வைரஸ் தொடர்பான நிபுணர்குழு அடக்கலாம் என்ற பரிந்துரையை முன் வைத்துள்ளது. ஆனால் நீங்கள் எதன் அடிப்படையில் இவ்வாறான கருத்தை முன் வைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதில் அளித்த பவித்ரா, மெத்திகா உள்ளடக்கிய நிபுணர் குழுவின் முடிவின் படியே எரிப்பு என்றும் , அதுவே பிரதான நிபுணர் குழு என்றும் வைரஸ் தொடர்பான நிபூணர் குழு பிராதான குழு அல்ல என்றும் கூறினார்.


உடனடியாக எழுந்த கஜேந்திர குமார் அப்படியாயின் குறித்த விடயத்தில் நிபுணத்துவம் வாய்ந்த வைரஸ் நிபூணர் குழுவின் பரிந்துரையை புறக்கணித்து விட்டா இவ்வாறான முடிவு என கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதில் அளித்த பவித்ரா பிரதான குழு இதுவரை எந்த தீர்மாணத்தையும் தர வில்லை, நிபூணர் குழு அறிக்கையினை அவர்கள் ஆராய்கிறார்கள் என்றார்; அவர்களின் முடிவின் பிரகாரம் தீர்மானத்தை அறிவிப்பதாக கூறினார்.


உடனே கஜேந்திர குமார் தன் கேள்விக்கு இது விடை இல்லை எனவும், எப்பொது இறுதி முடிவு வரும் என ஒரு கால எல்லையை கூறுமாறு கூறினார்.


எனினும் தினேஸ் குனவர்டன மற்றும் சபா நாயகரின் குறுக்கீட்டால் பதில் கிடைக்க வில்லை.


ஸப்னாஸ் ஸறூக்