கல்முனை பிராந்தியத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி


 


(சர்ஜுன் லாபீர்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை எல்லைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் மற்றும் ஏனைய விசேட நிலையங்களில் இன்று முதல்(30) கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ் இரண்டாம்.கட்ட தடுப்பூசி வழங்கும் ஆரம்ப நிகழ்வு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இடம்பெற்றது.

இன்றைய இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் மும்முரமான முறையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுவதனை அவதானிக்க கூடிதாக இருந்தது.