தீவுக்காலையைச் சேர்ந்தவர், கத்தாரில்ரில் மறைவு



Rep/SukirthaKumar


அக்கரைப்பற்று தீவுக்காலையைச் சேர்ந்தவரும் கட்டாரில் தொழில்புரிந்து வந்தவருமான முருகுப்பிள்ளை சதீஸ்வரன் இன்று அதிகாலை கட்டாரில் அகால மரணமடைந்துள்ளார்.  

அன்னார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் நிசாந்தினி அவர்களின் சகோதரி சுரேஜினியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்னாரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தாருடன் இணைந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வருகின்றனர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.