"பெருநாள் குதூகலம்"




 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் ஒரு வேலைத்தளத்தில் ஒன்றாக வேலை செய்பவர்களிடையே பரஸ்பரம் ஒற்றுமை, அன்பையும், சகோதர வாஞ்சையையும் ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற "பெருநாள் குதூகலம்" பாடசாலையின் நலன்புரி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்து.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுடன் மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர், மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ. அஸ்மி ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.