வாகனங்கள் காத்திருப்பு




 


வி.சுகிர்தகுமார் 0777113659


 அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று மீண்டும் எரிபொருளை பெற்றுகொள்வதற்காக வரிசையில் வாகனங்கள் காத்திருந்து பெற்றுக்கொண்டதை காண முடிந்தது.


எரிபொருளின் விலை இன்று நள்ளிரவுடன் குறைவடையலாம் என தெரிவித்துள்ள நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலை காணப்பட்டது.


ஆயினும் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த நிலையில் தூர பிரதேச வாகனங்களும் அங்கு வருகை தந்தமையால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.


வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அங்கு வருகை தந்த நிலையில் அவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.


அதிகளவான வாகனங்களின் வருகையால் சில மணிநேரத்தில் அங்கும் எரிபொருள் முடிவடைந்தது.


ஆயினும் பெற்றோல் கொள்வனவிற்கான பணம் செலுத்துப்பட்டுள்ளதால் நாளை எரிபொருள் கிடைக்கும் எனவும் வழமைபோன்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் எரிபொருள் நிலைய உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.