தெரிவு




 


பாறுக் ஷிஹான்


வவுனியா பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும்  புதிய ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் கடந்த வியாழக்கிழமை(13)  வவுனியா பூந்தோட்ட வவுனியா பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியில் சங்கத்தின் தற்காலிக தலைவரின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில்  செயலாளராக கல்முனையைச் சேர்ந்த யு.எல். றியாழ்  ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.அத்துடன்  பின்வருவோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவராக திரு கே. பூங்கண்ணன்,உப தலைவரராக திருமதி பீ. அனுஷா,செயலாளராக யூ.எல் றியாழ், உப செயலாளர் திருமதி என்.ராஜகுமாரி,பொருளாளராக
சி.சுதர்சன் ,தெரிவு செய்யப்பட்டதோடு நிர்வாக சபை உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 தி. ஜே.எப்.ஜஸ்றீன்,எம்.சுதர்சன்,எஸ். சைரஜன்,திருமதி கு. டனுஷா இவர்களுடன் உள்ளக கணக்காய்வாளராக செல்வி. த. தாட்சாயினி ,விளையாட்டு இணைப்பாளராக திரு சி. ரகுவரனும் தெரிவு செய்யப்பட்டனர்