அவசர நிலைமைகளின்போது விடுமுறையை அறிவிப்பது எவ்வாறு?




 


Circular Number : 24/2013

அவசர நிலைமைகளின்போது லீவினை அறிவித்தல்.


பின்வரும் ஏதாவது ஒரு முறையின்மூலம் விடுமுறையினை திணைக்களத் தலைவருக்கு அறிவிப்பதுடன், கடமையில் இணைந்தவுடன் உரிய விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி லீவிற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.


1. ரெலிமெயில் (Tele-mail) மூலம் அறிவித்தல்

2. மின்னஞ்சல் (Email) மூலம் அறிவித்தல்

3. குறுஞ்செய்திச் சேவை (SMS) மூலம் அறிவித்தல்

4. தொலைபேசி அழைப்பு (Telephone/Mobile phone Call) மூலம் அறிவித்தல்


மேலேயுள்ள முறைகளுள் ஏதாவது ஒன்றின்மூலம் அறிவிக்கப்படமுடியும். 


ரெலிமெயில்மூலம் அறிவிக்கும்போது ஆதாரமாக விண்ணப்பதாரிக்கும் ஒரு பற்றுச்சீட்டு கிடைப்பதனால் அது பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றது.


SMS மூலமும் அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கும்போது பொதுவாக அனுப்பிய நேரத்தினை உரிய விண்ணப்பதாரி தன்னுடைய ஏதாவது ஒரு டயரியில் எழுதி வைத்திருப்பது பாதுகாப்பானதாகும்.