தம்பிலுவில்,விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழந்தார்








வி.சுகிர்தகுமார் 0777113659 



 


  திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் பிரதான வீதியில் நேற்று(10) இடம்பெற்ற விபத்தில் படுகாயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அக்கரைப்பற்று பனங்காடு எனும் பிரிவைச்சேர்ந்த ரவீந்திரன் டிசாலன் எனும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் கடந்த வருடம் உயர்தரத்தில் வணிகப்பிரிவில் கல்வி பயின்று பரீட்சைக்கு தோற்றிய 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.
தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் எதிரே வந்த கல் ஏற்றிய லொறி ஒன்றுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்று அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்றிரவு (10) 11 மணியளவில் உயிரிழந்தார்.
குறித்த விபத்து தொடர்பில் திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் விபத்தில் சிக்கிய லொறியும்; மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன் லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்
அன்மைக்காலமாக விபத்துக்கள் காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருவதுடன் வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் செயற்படவேண்டியுள்ளமையும் சுட்டிக்காட்டுகின்றது.