சிவராத்திரி நிகழ்வு




  


(வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி விரதத்தை முன்னிட்டு இன்று (8) வெள்ளிக்கிழமை காலை பூஜை வழிபாடுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது.

பிரதேச செயலகம் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்தது.

மாணவரிடையே குருத்தோலை பின்னுதல் நிறைமுட்டிவைத்தல் கோலம் போடுதல் போன்ற பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகளில் போட்டி இடம்பெற்றது.

அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.