காத்தான்குடி மாணவன் யாழ்பல்கலைக்கழகத்தில்,தங்கம் வென்றார்





 காத்தான்குடியைச்சேர்ந்த மாணவன் யாழ்பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் உயர் தேர்ச்சியில் தங்கபதக்கம் பெற்றார்

காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது அஷ்ரஃப் றுஸ்னி அஹ்மத் Eng, நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் பொறியியல் பீடத்தில் உயர் தேர்ச்சி பெற்று தங்கபதக்கம் பெற்றார்.
ا
இவர் காத்தான்குடி 05 முஸ்தபா ஹாஜியார் வீதியில் வசிக்கும் முகம்மது அஷ்ரப் ரிஹானா தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்.
இவர் ஆரம்பக் கல்வியை மட்/ அல்ஹிறா மஹா வித்தியாலயத்தில் கற்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் வெற்றி பெற்று கல்வி பொதுத் தராதர சாதாரண பரிட்சையில் 9A சித்தி பெற்று காத்தான்குடி மத்திய கல்லூரியில் உயர்தரக் கணித பிரிவில் கல்வி கற்றார்..
பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கிளிநொச்சியில் உள்ள அதன் வளாகத்தில் பொறியியல் மாணவராக கற்று முதன்மையான இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.