தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை




 



நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் (HPV) தடுப்பூசியும், தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வளர்ந்தோருக்கான ஏற்புத்தடை (aTd) தடுப்பூசியும் ஏற்றும் நடவடிக்கைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.

இதேவேளை அப் பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 1,4,7 தரம் 10 வரையான மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் பாடசாலை பற் சிகிச்சையாளரினால் சுகாதார கழக அங்கத்தவர்களுக்கு வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலை பற் சிகிச்சையாளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.