அட்டாளைச்சேனையில், பெருந்தொகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன



 

Rep/Jezeer.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில், சுமார் முப்பது இலட்சம் பெறுமதியான ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள், போதைப்  பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அதிகாரி (SI) ஆப்தீன் தலைமையில்  மேற்கொண்ட குறித்த தேடுதலின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று பொலிசார் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளார்கள்.