" தேச அபிமானி ஊடகவி பூஷணம்" சகாதேவராஜாவுக்கு #வாழ்த்துக்கள்!





 ( நமது நிருபர்)

 பிரபல சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில் " தேச அபிமானி ஊடகவி பூஷணம்"  பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .


இந்த நிகழ்வு மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் ராஜா தலைமையில் இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது . பதின்மருக்கு கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்  எம்எச்எம். ஜாபீர்  பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவித்து விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.