கார்த்திகை தீபத் திருவிழாவில் இம்முறை பல வீடுகள் இருளில் மூழ்கிக்காணப்பட்டன.இவ்வாறு இருளில் மூழ்குவதற்கு காரணம் விளக்கு மற்றும் எண்ணேய் பற்றாக்குறை என மக்கள் தெரிவித்தனர்.இது தவிர டித்வா' புயல் அனர்த்தம் காரணமாக பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டமை ஆகும்.8 நாட்களாக சீரான மின்சாரம் குடிநீர் இன்மை எரிவாயு தட்டுப்பாடு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு பெற்றோல் டீசலுக்கு மக்கள் வரிசை என்பன இதில் உள்ளடங்கும்.
அவ்வாறு மேற்கூறிய விடயங்கள் இருந்தாலும் வழமை போன்று அம்பாறை மாவட்ட மக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக இவ்வாறு கொண்டாடுகின்ற இததினத்தை முன்னிட்டு இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை அவதானிக்க முடிந்தது.
சிறுவர் சிறுமியர் தத்தமது வீடுகளுக்கு முன்னால் தீபம் ஏற்றி ஆனந்தமடைந்தனர்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, சம்மாந்துறை,பெரியநீலாவணை ,கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு ,வீரமுனை ,நாவிதன்வெளி ,அன்னமலை ,மத்தியமுகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில் ,கோளாவில் ,ஆலையடிவேம்பு ,பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம் நடைபெற்ற நிலையில் ஏனைய தெய்வ ஆலயங்களில் சொர்க்கப்பானை எரித்து கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றன.


Post a Comment
Post a Comment