(எம். என். எம். அப்ராஸ் )
கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா,பொது நிறுவனங்கள் சம்மேளனம், வர்த்தக சங்கங்கள், ஊர் மக்கள் ஆகியோரின் பங்களிப்பில் கல்முனை அனர்த்த நிவாரண முகாவைத்துவ பணிமனையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டது.
சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட வெல்லம்பிடிய மெகடகொலன்னாவ பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் கடந்த (10) புதன்கிழமை கையளிக்கப்பட்டது. இங்கு 850 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேற்குறித்த நிவாரண பணியின் மற்றுமொரு ஒரு தொகுதி மல்வான ரக்ஷபான பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் கடந்த (10) புதன்கிழமை 450 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மல்வானை விதானகொடை மற்றும் காந்தியவெலவ பிரதேச மக்களுக்கான நிவாரணப் பொதிகள் விதானகொடை ஹிதாயா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் காந்தியவெலவ ஜும்ஆ மஸ்ஜித் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது. மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.
பொலனறுவைக்கு நிவாரணப் பொதிகள் திவுலான அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதின் ஆலோசனைகளுக்கமைய பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. பொலனறுவை மானிக்கம்பிடிய மக்களுக்கு மானிக்கம்பிடிய ஹுதா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் கிராம சேவகரின் ஆலோசனைகளுக்கமைய நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன .
மேலும் மூதூர் பால நகர் பகுதியில் ஜாமிஉல் அல்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.


Post a Comment
Post a Comment