(கிசாந்தன்)
எமது நாட்டில் உள்ள நகரங்கள் அனைத்தும் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நிலையில் நுவரெலியா பிரதேசசபைக்குட்பட்ட டயகம நகரம் இன்னும் அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் காணப்படுவது வேதனை தரகூடிய விடயமாகும்.
இந்நகரத்தில் 75 இற்கும் மேற்பட்ட வியாபார கடைகள் உள்ளதுடன் 400 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழும்நகரமாகும். வியாபார கடைகளில் அதிகமான ஊழியர்கள் வெளி பிரதேசங்களில் இருந்து கடைகளில் தங்கிதொழில் செய்கின்றனர்.
இங்கு நுவரெலியா பிரதேச சபையின் மூலம் நிர்வாகிக்கபடும் பொது மலசல கூடம் கடந்த 06 மாதம்காலமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்குள்ள மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
இங்குள்ள பொது மலசல கூடம் 06 மாதங்களுக்கு முன்பு நுவரெலியா பிரதேச சபையால் புணரமைப்பு பணிஆரம்பிக்கப்பட்டது. இப்பணிகள் பூர்த்தி செய்யபடாத நிலையில் மூடப்பட்டு இருப்பதாக இங்குள்ள வர்த்தகர்கள்தெரிவிக்கின்றனர்.
மலசல கூடம் மூடப்பட்டு இருப்பதன் காரணமாக நகரத்திற்கு வரும் பொது மக்கள் மற்றும் பாடசாலைமாணவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கின்ற இதேவேளை நகரத்திற்கு வரும் பெண்கள் வெளியில்சொல்லமுடியாத அளவிற்கு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
மலசலகூடங்கள் அமைந்துள்ள முன்பகுதியில் புற்கள் வளர்ந்து சுற்றாடல் மிகவும் மோசமான நிலையில்காணப்படுகின்றது. அத்தோடு மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசப்படுவதோடு மாலை நேரத்தில் நுளம்புதொல்லையும் அதிகரிததுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் மலசல கூடம் பணிகளை ஆரம்பிக்கும் போது நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள் காட்டியஆர்வம் தற்போது மூடபட்ட நிலையில் காணப்படும் மலசல கூடத்தினை திறப்பதில் எவ்விதநடவடிக்கைகளும் எடுப்பதில் அக்கறை காட்டவில்லையென இங்குள்ள மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.மூடபட்டுள்ள பொது மலசல கூடத்தினை நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள் உடனடியாக திறப்பதற்குநடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
