விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படட்னர்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோசித்த உள்ளிட்ட நால்வர் அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதன்படி இன்று யோசித்த உள்ளிட்ட குழுவினரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை தொடர்ந்தும் பெப்ரவரி 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு மன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
