(க.கிஷாந்தன்)
நு.சென்கிளயார் தமிழ் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 14.02.2015 அன்று பாடசாலையின் அதிபர் டி.வடிவேல் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஆறுமுகன் தொண்டமான், கௌரவ அதிதியாக மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் ரமேஸ்வரன், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், கணபதி கனகராஜ், முன்னால் கல்வியமைச்சர் அருள்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் நிகழ்வுகளையும் பிரமுகர்கள் அணிநடை வகுப்பை ஏற்றுக்கொள்வதனையும் உரையாற்றுவதனையும் இடம்பெற்ற நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.

