முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோஷித ராஜபக்ஷவை பார்வையிடவே இவ்வாறு சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
யோஷித ராஜபக்ஷவுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சி.எஸ்.என். நிறுவனத்தின் ஏனைய உறுப்பினர்களையும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது சந்தித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் கடுவலை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

