நீதி அமைச்சரின் நீதிமன்றங்களுக்கான விஜயம்



கல்முனையில்  நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ
காரைதீவு  வி.ரி.சகாதேவராஜா

நல்லாட்சியின் பின்னர் நாட்டிலுள்ள அனைத்து நீதி மன்றங்களும் சுயாதீனமாக செயற்படுவதாகவூம் நீதித் துறைக்குள் அரசியல் ஆதிக்கம் செலுத்தப் படுவதில்லையெனவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ  நேற்று கல்முனையில் தெரிவித்தார்.

அமைச்சரின்  உத்தியோக புர்வ  விஐயம் புதன் கிழமையன்று  மட்டக்களப்பிலும், வியாழன்று கல்முனை, அம்பாரை போன்ற இடங்களிலும் அமைந்திருந்தது.


கல்முனை சட்டத் தரணிகள் சங்கத்தின் தலைவர் எப்.எம்.அமீருள் அன்ஸார் மௌலானா தலைமையில் நடை பெற்ற இச்சந்திப்பில்  கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மாவட்ட நீதிபதி வீ.ராமகமலன்  நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ. பயஸ் ரஸாக் உட்பட கல்முனை தேல் நீதிமன்ற நீதி வலயத்துக்கு உட்பட்ட நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள்,  நீதி அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நீதி மன்ற வளாகத்தின் தேவைகள் குறித்து  அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து அதற்கான நடவடிக்கை எடுக்க செயலாளரைப் பணித்தார். கல்முனை நீதிமன்ற தேவையடங்கிய  மகஜர் ஒன்றும் சட்டத்தரணிகள் சங்கத்தால் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது