அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடலுடன் கலந்தது



Suhaib Umarlebbe

கடந்த இரண்டு நாட்களாக பெய்யும் அடை மழையின் காரணமாக ஏற்பட்ட மேலதிகமான வெள்ளத்திலிருந்து பொது மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரச அதிகாரிகள் மற்றும் ஏனையவர்களின் பொறுப்பாகும்.  

அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அக்கரைப்பற்று மாநகர பிரதேசம், அட்டாளைச்சேனை, பட்டியடிப்பிட்டி, பள்ளிக்குடியிருப்பு, ஆலையடி வேம்பு பிரதேசங்களிலுள்ள மேலதிக மழை நீரினை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக அக்கரைப்பற்று 40 ஆம் கட்டையிலுள்ள சின்ன முகத்துவாரம் 2017.01.24 ஆந் திகதி செவ்வாய் கிழமை தோண்டப்பட்டு மழை நீர்  கடலுக்குள் ஒடிக் கொண்டிருக்கின்றது.