விமான நிலையத்திலிருந்து இரு சடலங்கள் மீட்பு



இந்தியாவுக்கு யாத்திரைச் சென்று திரும்பிய இரண்டு இலங்கையர்களின் இரண்டு சடலங்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு  மீட்கப்பட்டுள்ளன. ஹக்மன வீதி, வலசமுல பிர​தேசத்தைச் சேர்ந்த சமரசிங்க டேவிட் (வயது 62) மற்றும் மெல்சிறிபுர பிர​தேசத்தைச் சேரந்த பி.டி.சோமாவதி (வயது 67) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான UL 1196  விமானத்தில் இருந்து நேற்று இரவு 7 மணியளவில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்​னெடுத்து வருகின்றனர்