2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
க.பொ.த சாதாரண தரத்திற்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்த காரணத்தினால் இரு வேறு பகுதிகளில் உள்ள மாணவனும் மாணவியும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில், ராகம பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் ரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கணித பாடத்தில் சித்தியடையாதமையால் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஹோமாகம பகுதியில் மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

