பெந்தொட்ட வாகன விபத்தில் 17 பேர் காயம்



பெந்தொட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 17 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அலுத்கமவிலிருந்து காலி நோக்கி பயணித்த பொருட்களை ஏற்றி; சென்ற லொறியொன்றும் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் இன்று (25) அதிகாலை மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தின் போது லொறி மற்றும் பஸ்ஸின் சாரதி உட்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் நாகொடை, பலப்பிட்டிய மற்றும் பெந்தோட்டை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.