புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை இன்று (06) மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய விமான நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுக்கப்படவுள்ளன.
புனரமைப்புப் பணிகளுக்காக கடந்த ஜனவாரி மாதம் 6 ஆம் திகதியிலிருந்து விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்ததாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புனரமைப்புப் பணிகள் சீன நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
புனரமைப்புப் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய விமானமாக கருதப்படுகின்ற ஏ_380 விமானத்தை தரையிறக்குவதற்கான வசதிகள் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

