கிழக்கு லண்டனில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனின் Bethnal Green என்ற பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்த கட்டிடத்தில் இருந்து பாரிய புகை வெளியேறுகின்ற நிலையில், அந்த புகையை சுவாசிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
28 வயதான Rosie Amies என்ற பெண்ணே வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 72 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பத்து தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக கட்டிடத்தின் கூரை வரை பரவியுள்ளது.
எனினும் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


Post a Comment
Post a Comment