கத்தாருடன் கண்மூடித்தனமாக ராஜதந்திர உறவுகளைத் துண்டித்த நாடுகள்




(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
கத்தார் (Qatar அரபுقطر ) மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு அமீரக நாடாகும். இது அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. கத்தார் ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்கே சவூதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளது. மக்கள் தொகையிற் பெரும்பான்மையினர் சுன்னி முஸ்லிம்கள் ஆவர்.


கத்தார் அரசு
دولة قطر
கொடிசின்னம்
நாட்டுப்பண்: அஸ்ஸலாம் அல் அமீரி
தலைநகரம்தோகா
25°18′N 51°31′E
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)அரபு
அரசாங்கம்முடியாட்சி
 • அமீர்தமிம் பின் அகமத் அல் தானி
 • பிரதமர்ஹமாத் பின் ஜஃபர் அல்-தானி
விடுதலை2
 • பஹ்ரைனிடம் இருந்து
செப்டெம்பர் 3 1971 
பரப்பு
 • மொத்தம்11,437 கிமீ2 (164வது)
4,416 சதுர மைல்
 • நீர் (%)புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
 • ஜூலை 2007 கணக்கெடுப்பு841,000 (158வது1)
 • 2004 கணக்கெடுப்பு744,029[1] (159வது)
மொ.உ.உ (கொஆச)2005 கணக்கெடுப்பு
 • மொத்தம்$25.01 பில்லியன் (102வது)
 • தலைவிகிதம்$31,397 (11வது)
மொ.உ.உ (பெயரளவு)2005 கணக்கெடுப்பு
 • மொத்தம்$42.463 பில்லியன் (62வது)
 • தலைவிகிதம்$49,655 (7வது)
மமேசு (2004)0.844
அதியுயர் · 46வது
நாணயம்ரியால் (QAR)
நேர வலயம்AST (ஒ.அ.நே+3)
 • கோடை (ப.சே) (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி974
இணையக் குறி.qa
1.2005 மதிப்பீட்டின் படி
2.1800களில் இருந்து அல் தானி குடும்பத்தினரால் ஆளப்படுகிறது.
கத்தார் (Qatar அரபுقطر ) மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு அமீரக நாடாகும். இது 1971ல், கத்தார் ஐக்கிய ராச்சியத்திடம் இருந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துவங்கியது.2017 ல் கத்தாரின் சனத்தொகை 27 இலட்சமாகும்.

2022 இல் உலக கால்பந்தாட்டக் கோப்பையினை நடத்துவதன் மூலம், மத்திய கிழக்கில் வராலாற்றில் முதல் தடவையாக நடத்துவதன் மூலமாக மத்திய கிழக்கில் உலக கால்ப் பந்துப்  போட்டியை நடத்தும் நாடு என்ற கிரிடத்தை அணியவுள்ளது.



































வளைகுடா நாடுகளுக்கும், அவற்றின் அருகிலிருக்கும் இரானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்திருக்கும் பின்னணியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இரானின் ஆதரவோடு செயல்படும் ஆயுதப்படைகளோடு கத்தார் ஒத்துழைப்பதாக சௌதியின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
நடந்தது என்ன?
திங்கள்கிழமை அதிகாலையில் கத்தாருடனுள்ள ராஜீய உறவுகளை திரும்ப பெற பஹ்ரைன் எடுத்த நடவடிக்கைக்கு பின்னர், சௌதி அரேபியவும் ராஜீய உறவுகளைத் திரும்ப பெற்றது.
இதனை தொடர்ந்து அவற்றின் நட்பு நாடுகளும் வெகுவிரைவாகவே இதே நடவடிக்கையை எடுத்தன.
"தீவிரவாதம், கடும்போக்குவாதம் போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே" இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதை சௌதியின் அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) மேற்கோள்காட்டியுள்ளது.
தங்களுடைய எல்லைகளில் வாழும் கத்தார் மக்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியேற வேண்டும் என்று மூன்று வளைகுடா நாடுகள் காலக்கெடு வழங்கியுள்ளன.
சமீபத்திய திருப்பங்கள்
•கத்தார் ராஜீய அதிகாரிகள் ஐக்கிய அரபு எமிரேட்டை விட்டு வெளியேற 48 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதம், கடும்போக்குவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் அமைப்புகளை ஆதரிப்பது, நிதி ஆதரவளிப்பது மற்றும் அவற்றின் கொள்கைகளை தழுவி கொள்வதாக அபுதாபி கத்தார் மீது குற்றஞ்சாட்டியுள்ளதாக டபியூஎஎம் (WAM) அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
•உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கி கத்தார் தலைநகர் தோகாவுக்கு இருக்கின்ற விமானப் பயண சேவையை இடைநிறுத்துவதாக, ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் விமான நிறுவனங்களான எத்திஹாட் ஏர்வேஸ், எமிட்ரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் விமான நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.



கத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த 5 நாடுகள்படத்தின் காப்புரிமைADAM PRETTY/GETTY IMAGES

•கத்தார் ஏர்வேஸூக்கு தங்களின் வான்வழியை மூடியுள்ளதாக நட்பு வளைகுடா நாடுகள் கூறியுள்ளன.
•பஹ்ரைனின் பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் கத்தார் ஆட்டங்காண செய்துள்ளதாகவும், அதனுடைய விவகாரங்களில் கத்தார் தலையிடுவதாகவும் பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
•"தீவிரவாதத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை" செயல்படுத்துவது, கிளர்ச்சி ஆயுதக்குழுக்களோடு கையாள்வதை போல அல் கயீதா மற்றும் இஸ்லாமிய அரசு அமைப்பு உள்பட தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவற்றால் தன்னுடைய நட்பு நாடுகளில் இருந்து கத்தாரை அகற்றியுள்ளதாக ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடும் அரேபிய கூட்டணிக்கு தலைமையேற்கும் சௌதி தெரிவித்திருக்கிறது.
பின்னணி
கத்தாரோடு ஏற்பட்டுள்ள இந்த ராஜீய சர்ச்சையில் திடீரென இந்த உறவை முறிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இம்முடிவு எதிர்பாராத ஒன்றல்ல. பல ஆண்டுகளாகவே பதட்டம் நிலவி, குறிப்பாக சமீபத்திய வாரங்களில் அது அதிகரித்த பின்னணியில் இது வருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே நான்கு நாடுகளும் அல் ஜசீரா உள்பட கத்தார் செய்தி இணையப் பக்கங்களை தடை செய்தன.
கத்தார் அரசர் தமிம் பின் ஹமாட் அல்-தானி, சௌதி அரேபியாவை விமர்சிப்பதாகக் கூறப்பட்ட கருத்துகள் கத்தார் அரசு ஊடகத்தில் வெளியானது.



கத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த 5 நாடுகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த தகவலை "வெட்கக்கேடான இணைய குற்றம்" என்று கூறி, இந்த கருத்துக்கள் போலியானவை என்று கத்தார் அரசு நிராகரித்தது.
2014 ஆம் ஆண்டு, தங்களுடைய விவகாரங்களில் கத்தார் தலையிட்டதாகக் கூறி, அதற்கு எதிராக கத்தாரில் இருந்த தங்களின் தூதர்களை சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரசு எமிரேட்டுகள் பல மாதங்கள் திரும்ப அழைத்து கொண்டன.
முக்கிய இரு அம்சங்கள்
பரந்த அளவில், திங்கள்கிழமை எடுக்கப்பட்ட இந்த முடிவில், இஸ்லாமியவாதக் குழுக்களுடன் கத்தாருக்கு இருக்கும் உறவுகள் மற்றும் சௌதி அரேபியாவின் போட்டியாளரான இரானின் பங்கு என இரண்டு முக்கிய அம்சங்களை தெரிவிக்கலாம்.
இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிராக போரிடுவதில் அமெரிக்காவோடு கத்தார் இணைந்துள்ள நிலையிலும், இஸ்லாமிய அரசுக்கு கத்தார் நிதி ஆதரவு அளித்தது என்று இராக்கின் ஷியா தலைவர்களிடம் இருந்து வருகின்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கத்தார் மறுத்துள்ளது.
இருப்பினும், இங்குள்ள செல்வந்தர்கள் நன்கொடைகளை கொடுத்தனர் என்றும், சிரியாவில் செயல்படும் கடும்போக்கு இஸ்லாமியவாத குழுக்களுக்கு பணத்தையும், ஆயுதங்களையும் கத்தார் அரசு வழங்கியிருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.



கத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த 5 நாடுகள்படத்தின் காப்புரிமைBRYN LENNON/GETTY IMAGES

அல் கயீதாவோடு தொடர்புடைய நுஸ்ரா முன்னணி என்று முன்னதாக அறியப்பட்ட ஒரு குழுவோடு தொடர்பு வைத்திருப்பதாகவும் கத்தார் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பயங்கரவாத அமைப்பு என்று வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட , இஸ்லாமியவாத முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பையும், இந்த குழுக்களையும் கத்தார் ஆதரிப்பதாகவும், அதனுடைய ஊடகங்கள் மூலம் இந்த குழுக்களின் கருத்துக்களையும், திட்டங்களையும் பரப்பி வருவதாவும் சௌதி அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
இரானோடு தொடர்பு வைத்துள்ளதை கத்தார் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

பாதிப்புகள் என்ன?

இந்த நிலையில், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள், கத்தாருடனான துாதரக உறவை துண்டித்துக் கொள்வதாக நேற்று அறிவித்தன. தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு, கத்தார் மக்களுக்கு இரண்டு வார அவகாசம் அளித்துள்ளன. கத்தார் துாதர்களை, 48 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளன.

யு.ஏ.இ.,யின் விமான நிறுவனமான இதியாட் ஏர்வேஸ், எமிரேட்ஸ், பிளை துபாய் ஆகியவை, கத்தார் தலைநகர் தோகாவுக்கு இன்று முதல் விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளன. கத்தாரின் விமான நிறுவனமான, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள், தங்களுடையவான் பகுதியில் பறக்கவும் இந்த நாடுகள் தடை விதித்துள்ளன. 
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையில் இருந்து, கத்தாரை விலக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள், வரும், 2022ல், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உள்ள கத்தாருக்கு,மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப் பெரிய படைத்தளம், கத்தாரில் அமைந்துள்ளது. இங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் முகாமிட்டுள்ளனர். விமானம் மற்றும் கடல் வழி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வீரர்கள் பயணத்துக்கு சிக்கல் ஏற்படும் அபாயமும் 
ஏற்பட்டுள்ளது.
'இறையாண்மைக்கு எதிரானது'
கத்தார் உடனான உறவை துண்டிப்பதாக நான்கு நாடுகள் அறிவித்துள்ளது குறித்து, கத்தார் அரசு கூறியுள்ளதாவது:இந்த முடிவு நியாயமற்றது. அரசியல் பாதுகாப்பு தேடும் நிலைக்கு கத்தார் தள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாக பொய்யான தகவலின் அடிப்படையில், இந்த தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
எங்களை அரசியல் புகலிடம் தேட வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, கத்தாரின் இறையாண்மைக்கு எதிரானது. இவ்வாறு கத்தார் அரசு கூறியுள்ளது.