தேசிய இராணுவ வீரர் நினைவு நிகழ்வு




இராணுவ வீரர்களை நினைவு கூறும் தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு பத்தரமுல்ல இராணுவ வீரர்கள் நினைவு தூபிக்கு அருகில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வுக்கு அமைவாக முப்படைகளை சேர்ந்த 50 அதிகாரிகள் சேவா விபுஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள். 

இதுதவிர இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்துள்ள மின் ஒளி பூஜை இன்று மாலை ஆறு மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ளது.