இலங்கை முதலில் துடுப்பாட்டம்




இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று இடம்பெறுகின்றது. 

அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை கூறத்தக்கது.