வேகத்தை குறைக்கவும்




தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வகையில் வேகக் கட்டுப்பாட்டை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. 

நிலவுகின்ற மோசமான வானிலை காரணமாகவே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.